Thursday, February 2, 2012

ஜெ.ஜெ. - செல்வா

துருப்பிடித்த துப்பாக்கி
பயன்படுத்தப்படாத ரவை
இரக்கமற்ற காவல்துறை
இறுகிப்போன ஆட்சியாளர்கள்
சுயமரியாதை காத்த தலைவரின் – நினைவேந்தல்
அமைதி ஊர்வலத்தில மக்கள்

நினைவேந்தல் வருகையில் தலைவர்
ஏதும் நடக்காத இடத்தில்
ஏதோ நடக்கப் போவதாய்
அவமதிப்புக்காகவே செய்யப்பட்ட கைவிலங்கின் துனிகரம்
வெகுண்டெழுந்த சில இளைஞர்களின் முற்றுகை
சாதிவெறிச் சனியனின் துப்பாக்கி அர்ச்சனை

வேறு வேறு காத்திருப்பிலிருந்த
இளைஞர் முதியவர்களின் தலை சிதறடிப்பு
ஈரம்படாத சாலைகள்
இரத்தத்தால் அபிசேகம்
சிறை வைக்கப்பட்ட மர அசைவுகள்
யாருமற்ற இடத்தில்
காய்ந்து கொண்டிருந்த இரத்தத்தை
தானியங்களால் மூடிய எறும்புகள்
(மாவிபக – படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment