Thursday, February 23, 2012

சஞ்சீவியாகும் கவிதை - அருணோதயம்


யார் வீட்டு நூலகத்திலோ
என் தொகுப்புக்கு
இடம் ஒதுக்கப்படும்போது

யார் ஏட்டுக் குறிப்பிலோ
என் கவிதை
ஏற்றி வைக்கப்படும்போது

யார் நெஞ்சக் கூட்டிலோ
என் கவிதை பச்சை குத்தப்படும்போது

என் கவிதை சஞ்சீவி ஆகிறது.
 (2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment