Tuesday, December 29, 2020

மீண்டும் கதவு - மின்னிதழாக...

               ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் முயல வேண்டியிருக்கிறது - லூயி மால்

அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வணக்கம்

1998 மார்ச் தொடங்கி 2012 இறுதிவரை வெளிவந்த ‘கதவு’ இதழ் மீண்டும் மின்னிதழாக ‘மாவிபக’ தோழர்களின் முயற்சியால் 2021 ஜனவரி முதல் தொடங்கப்படவிருக்கிறது. பொங்கல் நாளில் வலையேறவிருக்கிறது.

தங்கள் படைப்புகள் மற்றும் எழுத்துகள் வழியாக நீங்களும் எங்களின் பயணத்தில் இணைய வேண்டுமாய் அழைக்கின்றோம்.

படைப்புகளை pdf ஆகவோ image ஆகவோ அனுப்ப வேண்டாம்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

ஆசிரியர் – கதவு’க்காக

+91 9443184050

editorkathavu@gmail.com

Thursday, December 24, 2020

இனிய பண்பாளர் தொ.ப இன்னுயிர் நீத்தார்.


தமிழினத்தின் பண்பாடு தொடர்பான வரலாற்று ரீதியான தரவுகளை அறிவுத் தளத்திலும் உணர்வுத் தளத்திலும் அனைவருக்கும் கற்பித்த இனிய பண்பாளர் தொ.பா என்று அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் தொ.பரமசிவம் இனி மனித உடலுடன் நம்முடன் இல்லை.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார், நண்பர்கள், மாணவர்களுடன் கல்விப் புலத்திற்கு வெளியில் அவரிடம் கற்ற மாவிபக’வும் ஆழ்ந்த வருத்தத்தைத் பதிவு செய்கிறது.

அவரது உரைகளின் வழியாகவும் எழுத்துகள் வழியாகவும் நாம் தொடர்ந்து பண்பாட்டு அசைவுகளின் தாக்கத்தை உணர்ந்து செயல்படுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்.

Sunday, December 20, 2020

தோழர் கருப்பு கருணாவுக்கு செவ்வஞ்சலி


                 தமுஎகச துணைப்பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தினை அளிக்கிறது. தோழரின் இழப்பு முற்போக்கு இயக்கங்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் மாவிபக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

தோழர் கருப்பு கருணாவுக்கு செவ்வணக்கம்.

Thursday, December 17, 2020

உரையாடல் தொடர்கிறது....


‘கதவு’ இதழை மாவிபக தோழர்களின் முயற்சியில்...

மின்னிதழாகத் தொடங்கும் திட்டம் ஒன்று உரையாடலில் இருக்கிறது.



Wednesday, December 16, 2020

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் விருதுகள் 2020-21


அன்பு எழுத்தாளர்களே…

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் கடந்த ஆண்டு சிறுகதை தொகுப்புகளில் நான்கிற்கும் தோழர் குபா நினைவு விருதும் கவிதைத் தொகுப்புகளில் நான்கிற்கும்  தோழர் சுப்புராயுலு நினைவு விருதும் வழங்கிச் சிறப்பித்தது.

இநத ஆண்டில் கொரோனோ, நாடடங்கு போன்ற காரணங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நூல்கள் வெளியாகவில்லை. நாங்கள் அறிந்த வரையிலும் வெளியான ஒரு சில நூல்களில் பலவும் கொரோனோவைப் பின்னனியாகக் கொண்டவையாக இருக்கின்றன.

ஆதலால்…

2020-21 இரண்டு ஆண்டுகளுக்கும் இணைந்ததாக விருதுகள் தொடர்பான அறிவிப்பு 2021 செப்டம்பரில் வெளியாகும். அதற்குள்ளாகவே சில தோழர்கள் நூல்களை அனுப்பிவிட்டார்கள். தவறில்லை. விருதுக்கான நூல்களை அனுப்புபவர்கள் 2020-21 விருதுகள் தேர்விற்காக என்ற குறிப்புகளுடன் 2 பிரதிகள் அனுப்புங்கள். விருதுகள் தேர்விற்காக என்ற குறிப்புகள் இன்றி வரும் நூல்கள் அன்பின் காரணமாக அனுப்பப்பட்டதாகக் கருதப்படும்.

குறிப்புகள் அனுப்பத் தவறிய நண்பர்கள் / தோழர்கள் தொலைபேசி / மின்னஞ்சல் வழியாகவாவது தகவல் தரவும்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

94431 84050

maveepaka@gmail.com

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

Friday, December 11, 2020

நீங்க ஒரு தடவ சொல்லுங்க போதும்...

இந்தா குமாரு யாரு இவரு…. ம்… அவரேதான்…


நாங்க உங்ககிட்ட இருந்து பெருசா எதையும் எதிர்பார்க்கல…


அன்புள்ள ரஜினிகாந்த்துல ஒரு குட்டிப் பொண்ணுகூட நடிச்சீங்க…

அதாங்க எஜமான் படத்துலகூட (முத்து படத்துலயுந்தான்) அந்தப் பொண்ணுக்கு ஜோடியா நடிச்சீங்கல்லியா…

ஆன்மீக அரசியல்ன்னு ஒரு படத்துல அந்தப் பொண்ணுக்குப் பையனா நீங்க நடிச்சுட்டீங்கன்னா…

உங்கள் பிறவிப்பயன நீங்க அடைஞ்சுட்ட திருப்தியோட நாங்களும் எங்க பிறவிப்பயன அடைஞ்சிருவோங்க…


உங்களோட 70ஆவது பிறந்தநாள் அறிவிப்பாவோ… அல்லது டிசம்பர் 31 அறிவிப்பாவோ நீங்க இதமட்டும் ஒருதடவை சொன்னாப் போதும்…


நாங்க உங்ககிட்ட இருந்து வேற ஒரு ------------ யும் எதிர்பார்க்கல…


இந்தா குமாரு யாரு இவரு…. ம்… அவரேதான்…