Thursday, February 23, 2012

இரண்டு கவிதைகள் - அருணோதயம்


ஒன்று
யாரிடம் சொல்லாதேஎன
சொல்லப்பட்ட ரகசியம்
அப்படியேதான் சொல்லப்படுகிறது
எல்லோரிடமும்.

இரண்டு
தலைக்கேறிய மதுபோதை
நாக்கில் சனியாய் அமர
வம்பு வளர்த்துக் காயங்களோடு
விழுந்து கிடக்கும் அப்பாவை,
தெரிந்தும் தெரியாததுபோல்
கடக்கும் மகளிடம்
சக மாணவிகள் கேட்கிறார்கள்
இது உன் அப்பாதானே?”

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகள்)

No comments:

Post a Comment