Thursday, February 2, 2012

ஒளிரும் பாரதம் - செல்வா

உலைகலன்கள் அனைத்தும் கொலைக்கலன்களாய்
செர்னோபில் முதல் புகுஷிமோவரை
அடங்கா வெறி ஆர்ப்பரிக்கிறது
கூடங்குளத்தில்

மனித உயிர்களை மரணவேட்டை நடத்தி
இரத்தக்கறை படிந்த பற்களின் சம்பாசனை
இடிந்தகரையில் தேனீக்களின் ரீங்காரத்தை
இறையாண்மைக்கு எதிரானதென
வளர்ச்சியை முடக்கும் பயங்கரவாதமென

எண்ணிலடங்கா மரணப் பள்ளத்தாக்குகள்
நடத்திய ஏதேச்சதிகாரம்
இங்குமோர் மயான ஊர்வலம்
நடத்தத் துடிப்பது ஏனோ?

வறியோர்க்கு உணவளித்திடவா?
வேலையற்றோர் எண்ணிக்கை குறைத்திடவா?
இலவச கல்வி அளித்திடவா?
இல்லை
சுவிஸ் வங்கிகளை நிரப்பிடவா?
(மாவிபக – படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment