Tuesday, February 21, 2012

மூன்று கவிதைகள் - செண்பகராஜன்

ஒன்று
சொல்லலாம்…!
சொல்லாமலும் இருக்கலாம்…!
சொல்லி இருக்கலாம்…!
சொல்லாமலும் சொல்லலாம்…!

இரண்டு
நீ பார்த்தாய்…!
நான் கேட்டேன்…!
யார்தான் நம்மை உணர்வது…!

மூன்று
பேச வந்தார்கள்…!
பேசாமலே சென்றார்கள்…!
பேசாத என்னை
பேச வைத்தார்கள்…!
பேசாமல் சென்றவர்கள்
பேசுவார்களா…?
பேசும் நான் பேசாமலிருப்பேனா…?
நீங்களாவது அவர்களிடம்
பேசிப் பாருங்களேன்…!

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகள்)

No comments:

Post a Comment