Tuesday, December 24, 2019

மாவிபக’வின் விமர்சன அரங்கமும் படைப்பரங்கமும்


மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

விமர்சன அரங்கம்
படைப்பரங்கம்
2020 ஜனவரி 5ஆம் நாள்
மாலை சரியாக 5.30 மணி

அருப்புக்கோட்டை
பழைய பேருந்து நிலையம் அருகில்
அருஞ்சனை பிரஸ்


விமர்சன அரங்கில்…
பூமணி’யின் வெக்கை நாவல் குறித்து… கவிஞர் பாலா
‘அசுரன்’ திரைப்படம் குறித்து… தோழர் முனியசாமி

படைப்பரங்கில்… கவிதைகளுடன்…
தோழர் கேகே, தோழர் ரமேஷ், தோழர் மாணிக், கவிஞர் தமிழ்மணி, கவிஞர் ஜெயகணேஷ், புலவர் பா.ராஜேந்திரன், கவிஞர் பழனிக்குமார் - இன்னும் சிலர்

படைப்பரங்கில்… சிறுகதைகளுடன்…
தோழர் சத்யா, கவிஞர் பாலா, தோழர் கா.சி. தமிழ்க்குமரன், தோழர் மதிகண்ணன் – மற்றும் சிலர்

நிகழ்விற்கு தலைமை ஏற்க தோழர் அஷ்ரஃப்தீன்
வரவேற்க தோழர் ரமேஷ்
நன்றிகூற தோழர் ராமராஜ்
செல்லிடப்பேசி: 94431 84050, 94421 84060, 98659 55006 & 9884 86436

விருதுகள் 2019 - மாவிபக திட்டமிடல் கூட்ட முடிவுகள்



2017 டிசம்பர் 22ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் திட்டமிடல் அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி
தோழர் கு.பா. நினைவு சிறுகதைத் தொகுப்புகள் விருதுக்காக தேர்வு நூல்களின் பட்டியலையும் தோழர் சுப்புராயுலு நினைவு கவிதைத் தொகுப்புகள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பட்டியலையும் நடுவர் குழு 2020 ஜனவரி முதல்வாரம் முடிவடைவதற்குள் ஒப்படைக்க வேண்டும்.
தேவையின் அடிப்படையில் நடுவர் குழுவின் சந்திப்பு 2020 ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடைபெறும்.
விருதுகள் 2019ன் முடிவுகள் பொங்கலை ஒட்டி நமது இணைய தளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.
விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் முதல்நாள் முழுநாள் நிகழ்வாக அருப்புக்கோட்டையில் நடைபெறும்.
2020 மார்ச் 1 – ஞாயிற்றுக் கிழமை
ü  விருதுகள் வழங்கும் நிகழ்வு தோழர் பாட்டாளியின் தலைமையில் நடைபெறும்.
ü  நடுவர் குழுவின் சார்பாக சிறுகதைத் தொகுப்புகளின் தேர்வு பற்றி தோழர் சத்யா, கவிதைத் தொகுப்புகளின் தேர்வு பற்றி தோழர் கேகே இருவரும் உரையாற்றுவார்கள்.
ü  விருதுபெறும் எழுத்தாளர்கள் தங்கள் ஏற்புரையை சமர்ப்பிப்பார்கள்.
ü  கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி – நடுவர்குழு நிகழ்வு நாளில் அறிவிக்கப்படும். கவிதைகளுக்கான தலைப்புகள் முன்னதாகவே கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கவிதை வாசிக்கும் மாணவர்கள் அடையாள அட்டையுடன் வரவேண்டும். வாசிக்கும் கவிதையின் ஒரு பிரதியை வாசிப்பதற்கு முன்னதாகவே, நடுவர் குழுவிடம் கொடுக்க வேண்டும்.
ü  சிறுகதை / கவிதைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறும். சிறுகதைகள் குறித்து உயிர் எழுத்து இதழின் ஆசிரியர் தோழர் சுதீர் செந்தில் அவர்களும் கவிதைகள் குறித்து நவீன கவிதைகளின் முன்னோடிக் கவிஞர் தோழர் யவனிகா ஸ்ரீராம் அவர்களும் உரையாற்றுவார்கள்.
ü  இவர்களுடன் சிறுகதைத் தொகுப்பிற்காக விருதுபெற்றவர்களில் ஒருவரும் கவிதைத் தொகுப்பிற்காக விருதுபெற்றவர்களில் ஒருவரும் கருத்துரையாற்றுவார்கள்.
ü  நிகழ்விற்கு தோழர் மதிகண்ணன் தலைமை வகிப்பார்.
மேற்கண்ட மூன்று நிகழ்வுகளின் வரிசைப்படுத்தல் பின்னர் இறுதி செய்யப்படும்.
ü  நிகழ்வில் வரவேற்க தோழர் ராமராஜ்
ü  நன்றிகூற தோழர் அஷ்ரஃப்தீன் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, December 20, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
15. சந்திரா மனோகரன் அவர்களின்வெயில் விழுங்கும் வீடு
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Friday, December 13, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
14. இராம இளங்கோவன் அவர்களின்வெளிச்சம் தேடும் வேர்கள்
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
21. இராம இளங்கோவன்  அவர்களின்
குழந்தைகளுடன் குழந்தையாய்…சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.


மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
20. க.மூர்த்தி  அவர்களின்
கள்ளி மடையான்சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Tuesday, December 10, 2019

வண்ணம் - சத்யா


வெள்ளைநிறத்தில் சிகப்பும் நீலமுமாய்
வண்ண விளக்கெரியும்
பேருந்தைக்கண்டு
கைகளைத் தட்டியபடி
துள்ளிக்குதித்து அந்தக் குழந்தை சொல்கிறது
ம்மா இது பத்தூவா

மஞ்சள் நிறத்தில் கருப்பு ஸ்டியரிங் வைத்த
எலக்ட்ரிக் காரைக் கண்டு
அதனுடைய கண்கள் அகல விரிய
மேல் வரிசையிலும் கீழ் வரிசையிலும்
நான்குஜோடிப் பற்கள் தெரிய சிரித்தபடி
அதை உற்றுப்பார்த்து சொல்கிறது
ம்மா இது பத்தூவா

சாவி கொடுத்தால்
பக்கவாட்டில் ஆடி ஆடி
கையிலிருக்கும் டமாரத்தில்
டமடம டமடம டம் என்று ஓசை எழுப்பும்
காதுகள் வானை நோக்கி உயர்ந்த
கொழுகொழு கன்னங்களுடன்
பற்களெல்லாம் தெரிய
பிறைபோல் வாய் திறந்து
சிரிக்கும் பிங்க் நிற முயலிடம்
அதைப்போலவே பக்கவாட்டில்
ஆடியாடி சிரித்துவிட்டு சொல்கிறது
ம்மா இது பத்தூவா

புஜ்ஜியின் கையை ஒரு கையால் பிடித்து
இன்னொரு கையால் மலையைக் காட்டி
முதுகில் ஊதா நிற பையோடு நடக்கும்
முட்டைக்கண் டோராவின் படம்போட்ட
ஸ்கூல் பையை
அம்மாவின் சுடிதாரைப் பிடித்து
இழுத்து காட்டிவிட்டு சொல்கிறது
ம்மா இது பத்தூவா

சிவப்பு கார்
கருப்பு குதிரை
பச்சை தவளை
வெள்ளைக் கரடி
நீலம்
காவி
மஞ்சள்
ஆரஞ்சு
என எல்லா நிறங்களையும் பார்த்து
குதூகலித்துச் சொல்கிறது
ம்மா இது பத்தூவா

அவசரமான வரட்டுப் புன்னகையைக் கொட்டிவிட்டு
நிறக்குருட்டுக் கண்களால்
கருப்பு வெள்ளையாய் ஒட்டப்பட்ட
விலைச் சுட்டியை உற்றுப் பார்க்கிறார்கள்
பத்து ரூபாய்க்குமேல் மதிப்பு தெரிந்தவர்கள்

000 000 000

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
19. ஞா.கலையரசி  அவர்களின்
புதிய வேர்கள்சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Monday, December 9, 2019

சட்டை - சத்யா


தண்ணீர் தீர்ந்த நெகிழி போத்தலைக்
கசக்கியதுபோல்
படபட ரரரரவென்னும்
காது கூசும் புலம்பல்

'எங்கே... எங்கே...'
ரம்பமாய் கிழிக்கும்
நரிகளின் பேரழுகை

'காணோமே காணோமே'
நெருப்புக் காற்றின்
மூங்கில் கீதமாய்
யாக்கை உருகும் அழுகை

மழைவழியும் தகரமாய்
காதுக்குள் வழிந்தது

'என்ன காணோம்?' என்றதற்கு
விசும்பலை அடக்கி
'அழகான
அருமையான
பளபளக்கும்
முப்பாட்டன் தந்து
நான்
பொத்திக்காத்த ரத்தச்சட்டை' என்றது

'ரத்தமா? யார் ரத்தம்?'
'யாருடையதோ நான்தான் காப்பான்'
'களவு போனதா?'
'இல்லை'
'கிழிந்து போனதா'
'இல்லையில்லை'
'சாயம்போனதா?'
'இல்லவேயில்லை'
'பிறகு'
'நான்தான் எறிந்தேன்'

அவசரமாய் சுரண்டி
மண்ணுக்குள் கைவிட்டு
முக்கி இழுத்தது

'இதோ... இதோ'

வட்டக் குழலாய்
சிவப்புத்துணியொன்று
கையோடு வந்தது

'வலக்கையை வைத்துக்கொண்டேன்'
குட்டியை நக்கும் பூனையாய்
தடவிக் கொடுத்தது
பின்பு எக்காளமாய்ச் சொன்னது
'மிச்சமீதிகளை எறிந்துவிட்டேன்'

திடீரென
மழை பெய்ந்த சாலையாய்
அவசர கருமையை அப்பிக்கொண்டு
ஓ... வென்றழுதது
'அது காணோமே'யென்று

தேடிச்சலித்து
கை உதறி
மண் தெறித்து எழுந்தது

'எனக்கு எல்லா சட்டையும் சேரும்
எனக்கு மட்டும்தான் எல்லா சட்டையும் சேரும்
சிவப்பு சட்டை
கருப்பு சட்டை
நீல சட்டை
பச்சை சட்டை
ஏன் காவிச் சட்டை கூட எனக்கு சேரும்'

கழுத்து நரம்பு புடைக்க
கை முஷ்டியை மடக்கி
வான்நோக்கி காற்றில் குத்துவிட்டபடி
வலக்கை துணிகொண்டு
குறி மறைக்க இயலாமல்
அக்குளில் அடக்கி
குறிகள் குலுங்க குதித்து சொன்னது

'எனக்கு எல்லா சட்டையும் சேரும்
எனக்கு மட்டும்தான் எல்லா சட்டையும் சேரும்'
சுய அம்மணத்தை சட்டை செய்யாமல்
000 000 000

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
18. கிருஷ்ணமூர்த்தி  அவர்களின்
காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு
சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Saturday, November 30, 2019

சதி - சத்யா


அவருக்கு சதி செய்பவர்களை நன்றாக தெரியும்

அவரை சுற்றியிருந்த எல்லோரும்
அவருக்கெதிராய் சதி செய்ததாய்
மதுநெடி வார்த்தைகளை உமிழ்ந்திருக்கிறார்

சில தருணங்களில்
அவருடன் சதி தேடியவர்கள்
காணாமல் போயிருக்கிறார்கள்
அது கண்டிப்பாக சதிகாரர்களின் சதி என்பார்

சில தருணங்களில்
அவருக்கு எதிராய் சதி செய்த
சதிகாரர்கள் காணாமல் போய் விடுவார்கள்
அதுவும் சதிதான் என்பார்

சில தருணங்களில்
அவரும் சதி செய்வதுண்டு
ஆனால் அந்த சதிகள்
நீண்டகால நலன் கருதி
குறுகிய கால விளைவுகளோடு எடுக்கப்பட்ட
குட்டி சதிகள் என்று
அவற்றின் தலையைத் தடவிக்கொடுப்பார்
செல்ல நாய்க்குட்டி போல

சில தருணங்களில்
கோப்பை மது குடலுக்கு சேராததும்
சதிதான் என்று சாதிப்பார்

சில தருணங்களில்
அவரது வருக்கி பொட்டலங்களை
கடித்துத் தின்ன
எலிகள் சதி செய்வதாய் சொல்லி
பூனைகளை வளர்த்து வந்தார்
பின்பு
அடுக்களையில் பால் காணாமல் போய்க்கொண்டிருந்தது
பூனைகள் மீது பழி போட
எலிகளும் வேட்டை நாய்களும்
கூட்டுச்சதி செய்வதாய்
கூக்குரலிட்டார்

கட்டக் கடைசியாய்
தன் புட்டத்தில் ஒட்டியிருந்த மலத்தினைக்
கழுவ சதி நடப்பதாக
இடக்கை உடைய அனைவரையும்
குற்றம் சாட்டினார்

மல நாற்றம் தாளாமல்
அருகிலிருந்த அனைவரும்
விலகி விலகி ஓடினர்

விலகலுக்கும்
சதிகாரர்கள்தான் காரணம் என்று
புலம்பிக்கொண்டிருந்தார்
மலத்தினை மேனியெங்கும் பூசிக்கொண்டு
0

Thursday, November 28, 2019

மீட்பர் - சத்யா

மீட்பர் - சத்யா

இதோ நமது மீட்பர் என்றனர்

நம் போன்ற
செம்மறி ஆட்டுக்குட்டிகளை
தொட்டுத் தூக்கி தோளில் சுமப்பவர் அவர் என்றனர்

செம்மறி ஆடுகளுக்காய்
கசாப்புக்கடைக்காரனின் கழுத்தைப் பதம்பார்த்த
பட்டாக்கத்தியை தன் இடுப்பில் சொருகி வைத்திருப்பவர் அவர் என்றனர்

நமக்கான
புல்லுக்கட்டுகளைச் சுமக்கும்
சும்மாடினை
தலையில் அணிந்தவர் என்றனர்

நமக்காக
மலைகளிலும் பள்ளங்களிலும்
நதிகளிலும் காடுகளிலும்
அலைந்து தேய்ந்த செருப்பினை அணிந்த
நல்ல மேய்ப்பர் அவர் என்றனர்

அன்பும் பேரெழிலும் கொண்ட
சலனமற்ற கண்களால்
நம்மை மோட்சிக்க வந்த மீட்பர் என்றனர்

காரிருளில்
கைபிடித்து வழிகாட்டும்
வெளிச்சம் அவர் என்றனர்

தடுமாறி தரையில் விழும் நம்மை
தாங்கிப்பிடிக்கும்
தயாளர் என்றனர்

மலையுச்சியில் உறங்காத சன்னல்களுடைய
அவர் வீட்டின் வாசலில் நின்று
உரக்க சத்தமெழுப்பிக் கேட்டேன்
'நீரா எம் மீட்பர்'

படாரென கதவைத்திறந்து
அருள்பொங்கும் கண்களால்
என்னைப் பார்த்து புன்னகைத்தபடி
செம்மறியாடுகளின் ரோமத்தாலான
மேலாடையை இழுத்துவிட்டுக்கொண்டு சொன்னார்
'ஆம், யாமே உமக்கான மீட்பர்'

Wednesday, November 27, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
13. முத்துராசா குமார் அவர்களின்பிடிமண்
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Tuesday, November 26, 2019

நீதி - சத்யா

நீதி - சத்யா


உலகின் ஆகச்சிறந்த நியாயவான்களின் நீதி வழங்கப்பட்டது

இதுதான் தீர்ப்பென்று
எழுதி முடித்து
முகத்தில் எறிந்தவர்களிடம்
'இது நீதியா' எனக் கேட்டபோது அனாயாசமான உறுமலை வெளிப்படுத்தினர்

இதோ தீர்ப்பென்று
படித்து முடித்து
கிழித்து வீசியவர்களிடம்
'இது திருப்தியா' எனக்கேட்டபோது அருவமான முனகலை வெளிப்படுத்தினர்.

இது நீதியென்று
களித்து கொண்டாடி
மகிழ்ந்தவர்களிடம்
'யாருக்கான நீதி' என்றபோது
கடைவாயில் வழியும் ரத்தமுடைய பற்கள் தெரிய சிரித்து, 'நமக்கானது' என்றனர்.

கையில் திணிக்கப்பட்ட
நீதியின் கனம் தாங்காமல்
வருத்தப்பட்டு பாரஞ்சுமந்தவர்களிடம்
'இது யாருக்கான நீதி' என்றபோது
பற்களின் தடம் பதிந்த கழுத்தில் வழியும் ரத்தத்தை மேலாடையால் மூடிக்கொண்டு பதட்டமாக, 'நமக்கானது' என்றனர்.

நியாயவான்களிடம்
'ஐயா நீதி எதற்காக வழங்கப்படுகிறது'
என்று கேட்டபோது
திருப்திப்படுத்த என்றனர்

சிலநேரங்களில் பெரும்பான்மையினரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் அதிகாரம் படைத்தோரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் பெரும்பான்மை அதிகாரம் படைத்தோரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் அதிகாரம் படைத்த பெரும்பான்மையினரை திருப்திப்படுத்த

சிலநேரம் தக்கவைக்க
சிலநேரம் நெட்டித்தள்ள
சிலநேரம் அவசரப்படுத்த
சிலநேரம் தாமதப்படுத்த

அடிக்கவும்
தடுக்கவும்
இடிக்கவும்
கட்டவும்

நீதி வழங்கப்படுகிறது என்றனர் அந்த மகா நியாயவான்கள்
புன்னகை மாறாத முகத்தோடு

'ஐயா,
அப்போது நீதி
நியாயத்துக்காய் வழங்கப்படுவதில்லையா?'
என்றவுடன்

மூக்கு நுனியில்
ஒட்டிய கண்ணாடியின் மேல்
கண்களை உருட்டி
உதடுகளும்
கன்னத்து கழுத்து சதைகளும் குலுங்க
கிரீடமாய் சூட்டப்பட்ட
கழுத்தின் இருபுறமும்
சுருளும் வெள்ளை முடிகளை அள்ளி
குடுமியாய் முடிந்துகொண்டு
ஒத்த குரலில்

'உனக்கான நீதி வழங்கப்பட்டது
உனக்கு வழங்கப்பட்டதே உனக்கான நீதி'
என்றபடி
வெளியேறுவதற்கான நீதியை என் கையில் திணித்தனர்.

ஆம்,
உலகின் ஆகச்சிறந்த நியாயவான்களின் நீதி
வழங்கப்பட்டது.

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
17. வீ. உதயக்குமாரன்  அவர்களின்
கண்ணாடி மாளிகைசிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Friday, November 8, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
16. எம்.ஆர்.சி.திருமுருகன்  அவர்களின்
நானொரு டெர்ன் பறவைசிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Thursday, October 31, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
12. ஷக்தி அவர்களின்அபோர்ஷனில் நழுவிய காரிகை
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Thursday, October 24, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
15. ராமன் முள்ளிப்பள்ளம் அவர்களின்
மன்னனின் மீன் வதைத் தடைச் சட்டமும் நான்காம் மனைவியும்
 சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.