Thursday, February 2, 2012

கீறல் படர்ந்த நிலம் - செல்வா


கீறல் படர்ந்த நிலம்
வானம் கண்டு வதங்கும் பயிர்கள்
கூணல் விழுந்த விவசாயி
இறுமாப்பு கொள்ளும் அரசு
கொக்கரிக்கும் நீதிமன்றம்
ஆணைக்கு அடங்க மறுக்கும் சர்வாதிகாரம்
வெட்கித் தலைகுனியும் சட்டப்புத்தகம்
எதையும் கண்டு கொள்ளாத டர்பன்
முட்டி மோதும் மழைத்துளிகள்
முடிவான பயணம் நோக்கி
வேகத் தடைகளாய் திமிறியெழத் துடிக்கும் ஒப்பந்தங்கள்
மனித நேயம் எழுப்பிய வரலாற்றை / வாழ்வாதாரத்தை
வெடி வைத்து தகர்க்கக் காத்திருக்கும் கதராடைகள்
(மாவிபக – படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment