Monday, January 20, 2014

மயில்கள் சரணாலயம் – கேகே

வாகனங்கள் பறக்கும் சாலையில்
மயில்கள் முடங்கிப் போயின.
வாகனம் மோதி உயிர் நீத்த தொன்று
குருதிக்காய் கொல்லப்பட்ட தொன்று
கறிக்காக மற்றொன்று
… … … எனப்பல.
வானவில்லையொத்த தன்னுடல்
நிறம் மங்குவது கண்டு
துணுக்குற்றது அந்த மயில்.
மயிலிறகைச் சேமிக்கும் சிறுமி
கடைசி மயிலின் தோகையைப் பார்த்து
கலங்கியபடி முணுமுணுத்தாள்

‘தோகை’ மயிலிடம்தான் அழகு.