Sunday, February 19, 2012

மனுநீதி - செல்வா


களத்தில்
சிதறிய தானியங்களை ...

பறவைகள் கொத்திச் சென்றன
எறும்புக்கள்  கவர்ந்து சென்றன
மனிதம் சிறகை விரித்து

ஆடுகள் தின்றன
நா சுழன்று பிதுங்கியது

வர்ணாச்சிரமத்   தெருக்கள் -
நடந்து சென்றனர்
ஒத்துங்க என்றது   மேட்டுக்குடி

சேரித்  தெரு -
நடந்து சென்றனர்
பற்றி எறிந்தது

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment