Tuesday, February 21, 2012

மரணபயம் – பா.ராஜேந்திரன்

படை திரட்டி வரும்வேளை
புகை மூட்டி விரட்டினீர்கள்
பதுங்கித் தாக்கினோம்
திரவவடிவில் துர்வாடை வீசினீர்கள்
மயங்கிச் சரிந்தோம்
இனியும் தப்ப முடியவில்லை
உங்கள் கரங்களில்
மின்சாரச் சுடுகாடு
கொசுபேட்

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment