Tuesday, December 29, 2015

படைப்பரங்கம் மற்றும் கலந்துரையாடல்


மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
படைப்பரங்கம் மற்றும் கலந்துரையாடல்

அருப்புக்கோட்டை – மதி இல்லம்
2016 ஜனவரி 3 – ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00மணி முதல் பிற்பகல் 1.30 வரை

‘சாதியும் வர்க்கமும்’ என்ற பொதுத் தலைப்பிலான கலந்துரையாடலில்…

துணைத் தலைப்புகளிலான விவாதக் குறிப்புகளை முன்வைக்க…

தோழர் முனியசாமி – கிராமப்புறங்களில் வர்க்கம்
தோழர் மாணிக்      - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) சாதியம்
தோழர் அஷ்ரஃப்    - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) வர்க்கம்

படைப்பரங்கையும் கலந்துரையாடலையும் ஒருங்கிணைக்க தோழர்கள் ரமேஷும் வருணும்
வரவேற்கவும் நன்றி கூறவும் தோழர்கள் ராமராஜும் கேகே’யும்

தொடர்புகளுக்கு 94431 84050 & 9442184060
maveepaka@gmail.com

அன்புடன் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

Wednesday, December 23, 2015

மாடி வீடுகள் - சிறுகதை - ஹரி ராஜா

முடி திருத்தும் கடையின் வாசலில்  முன்னாள் கடைக்குட்டியாகிய நான்  நின்றிருந்தேன். “முடி வெட்ட வேண்டுமென்றால் உள்ளே வாஎன்றான் கடைக்காரன்.
இல்லைஎன்றேன் நான்.
வேறென்ன?”
ஒரு சந்தேகம்என்று இழுத்தேன்.
என்ன?”
இவ்வளவு தரித்திரத்தை வைத்துக் கொண்டு ஏன் இன்னும் ஏழையாகவே இருக்கிறீர்கள்?”
தரித்திரத்தோடு இருப்பதாலேயல்லவா ஏழையாய் இருக்கிறேன்?”
இங்கெல்லாம் தரித்திரத்துக்கு மதிப்பில்லையா?”
தரித்திரத்துக்கு மதிப்பா? பேசாமல் போய்விடுஎன்று கத்திவிட்டு நாட்டில் குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை’ என்று முனங்கிக் கொண்டான்.
ஒரு மாதம் கழிந்திருந்தாலும் இப்போதும் என்னைப் பார்த்தால் முறைப்பான். அதனாலேயே எனக்கிருந்த இன்னொரு சந்தேகத்தை தற்காலிகமாக கேட்காமலிருக்கிறேன்.
என் கதையை என்னவென்று சொல்வது. விடுதலை என்பது என் வாழ்வில் அடுத்த துன்பத்துக்கான இடைவெளி என்றே ஆகிவிட்டது. வெறுப்புணர்வு மேலிட எருமை ரோமங்களாலான கூரை வீட்டிலிருந்து தப்புவதென்று முடிவெடுத்தேன். எங்கே போவது? ஒன்றும் புலப்படவில்லை.
கூரை வீடுகள் சலிப்பை ஏற்படுத்தி விட்டன. எங்கே போனாலும் விதிகளை மாற்றிவிட்டுநீ தான் கடைக்குட்டி, சொல்வதைக் கேள்என அதட்டுகிறார்கள். அந்தக் கிழவியின் தொல்லையோடு உளவாளிகளின் இம்சை வேறு. கடைக்குப் போனால் உளவாளி தண்டனை கொடுப்பான்; போகவில்லையென்றால் கிழவி மயிலிறகை வைத்து அடித்து நொறுக்குவாள். தீவிர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன்.
ஆளரவமற்ற இருள் சூழ்ந்த நண்பகலில் தப்பி ஓடினேன். யதார்த்த உலகம் குறித்து தங்கக் கூரை வீட்டிலிருந்த சமயத்தில் கிழவர் நிறைய சொல்லியிருக்கிறார். இங்கு வந்து வேலை தேடிக் கொள்வதே  ஒரே தீர்வு என்று எண்லானேன். ஆனால் அது எவ்வளவு பெரிய மூடத்தனமென்பதை வந்த இரண்டாம் நாளேயல்லவா உணர்ந்து கொண்டேன்!
வழியில் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக கையில் கொஞ்சம் தரித்திரம் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். குட்டையைக் கடந்தால் யதார்த்த உலகத்தை அடைந்துவிடலாம். ஆனால் எனது உருவம் அவ்வளவு பெரியதாக இல்லை என்பதால் அங்கிருந்த எறும்பின் உதவியை நாடினேன். இப்படியாக எறும்பின் முதுகில் ஏறிக்கொண்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன். பத்தே நிமிடத்தில் என்னை கரை சேர்த்த்து எறும்பு.
வந்த சேர்ந்த உடனேயே பேரதிர்ச்சி காத்திருந்த்து. குட்டையைப் பார்த்தேன். அது கடலாக மாறி விட்டிருந்தது. எனக்கு உதவிய எறும்பு சிரஞ்சீவியாவதில் உடன்பாடு இல்லை என்பதால் அக்கரை செல்ல வேண்டாமென அதைத் தடுத்து விட்டேன். மத்தியானத்தில்  வெயில் சுட்டெரிக்கிறது. தரித்திரம் கொடுத்து சாப்பாடு கேட்டால் அடிக்க வருகிறார்கள். மட்டுமல்லாமல் தரித்திரக் குவியலில் வாழ்பவனுக்குக் கூட அதன் அருமை தெரியவில்லை. இங்கே யாரிடம் என்ன வேலை கேட்பது என்றும் விளங்கவில்லை.  இங்கே கூரை வீடுகளையே பார்க்க முடியவில்லை. இவர்களது மாடி வீடுகள் எனக்கு வினோதமாக இருந்தன.
ஆனால் அன்றே ஒருவன் எனக்கு வேலை தருவதாக வாக்குறுதி கூறி மறுநாள் அதிகாலை வருமாறு கூறினான். அன்றிரவு நடைபாதையில் (மக்கள் நடுத்தெருவில் நடக்காமல் இதில் தான் நடந்து செல்கிறார்கள்) தூங்கினேன்.  
மறுநாள் காலை அவனிடம் சென்றேன். அந்தப் பகுதியிலிருக்கும் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்வதுதான் வேலை. பால்பாக்கெட்டுகளையும் மிதிவண்டியையும் கொடுத்துவிட்டு வீடுகளின் விலாசங்களையும் எழுதிக் கொடுத்தான்.
ஒருமணி நேரம் கழிந்திருக்கும். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்து மிதிவண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பால் பாக்கெட்டுகளை வைத்திருந்த பை வெறுமையாக இருப்பது சில அடி தூரத்திலேயே புலப்பட்டது. சோர்வுற்று மரத்தடியில் சாய்ந்து கொண்டேன். இவ்வுலகில் தேவையற்ற ஒருவனாய் வந்து சேர்ந்த என்னைப் போல அந்தக் கட்டிடத்தின் முன் தேவையில்லாத ஒற்றை மரம். எப்படியும் ஐந்து அல்லது ஆறு பாக்கெட்டுகள் இருக்கும். முதலாளிக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
என் மீது விழுந்த துளிகளை தொட்டுப் பார்த்தேன். அது பால் தான் என்று தெரிந்தது. மரத்தை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு குரங்கு எந்தக் கவலையும் இல்லாமல் ரசனையோடு சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தது.
“குடியிருப்புக்குள் குரங்கா? நல்ல கதை. இதோ பார். ஏற்கனவே காது குத்திவிட்ட காரணத்தினால்தான் கடுக்கன் அணிந்திருக்கிறேன். உன்னை இன்னொரு முறை நான் பார்த்தால் என்ன செய்வேன் என எனக்கே தெரியாது” என்று கத்தினான்.
ஆதரவளிக்க எவரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய இடத்தில் என் மீது பரிவு காட்ட ஒருவரும் இல்லை என நொந்து போனேன். அந்தச் சமயத்தில் தான் இட்லிக் கடையில் வேலை கிடைத்தது. . கடைக்காரன் தயவில் அவன் வீட்டிலேயே தங்கிக் கொண்டேன். அவனும் அனாதை தான்.  
நாட்கள் உருண்டோடின. எல்லாம் சகஜமாக இருப்பதாகவே தோன்றியது. இவ்வுலக இயல்புகளை முதலாளி மூலமே தெரிந்து கொண்டேன். அதற்கேற்றார் போல் என்னை தகவமைக்கும் முயற்சியிலிருந்தேன். ஆனால் வாழ்க்கை விடுவதாக இல்லை. நேற்று நடந்த சம்பவம் என் அமைதியை மீண்டும் குலைத்து விட்டது.
இரவு சாப்பிட்டுவிட்டு கை கழுவி வருவதற்காக உள்ளே சென்றேன். வந்து பார்த்தால்…… நடு வீட்டில் பசு மாடு பரோட்டா தின்று கொண்டிருக்கிறது. அதை விரட்டி விட்டாலும் வாயில் பரோட்டாவை கவ்விக் கொண்டு சென்று விட்டது. கடை சென்று திரும்பிய முதலாளி உணவு பரிமாறுமாறு கூறினான்.
“மன்னித்துக் கொள்ளுங்கள். ரொம்பப் பசி. நானே தின்று விட்டேன்” என்றேன்.
”சரி பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்த முட்டையை உடைத்துக் குடித்துவிட்டு தூங்கிப் போனான்.
என் அதிர்ஷ்டம் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. படகு வலித்துக் கொண்டு போனால் கடல் குட்டையாகியதும் அது மூழ்கிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
எப்படிக் கடப்பேன்?
(ஹரி ராஜா’வின் கூரை வீடுகளின் தொடர்ச்சியாகக் கட்டப்பட்டவை இந்த மாடி வீடுகள். கூரை வீட்டை மீண்டும் ஒருமுறை பார்க்க நீங்கள் கீழுள்ள இணைப்பின் வழிவாயக நுழையுங்கள்.)

Tuesday, December 22, 2015

சட்டம் - சிறுகதை - சத்யா

“ட்டப்... ட்டப்...”
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது, இவன் ஜன்னலுக்குக் கீழே ஒளிந்துகொண்டான். இடுப்பை தடவிப்பார்த்தான். துப்பாக்கி நெருடியது. மெதுவாக வெளியே எடுத்து பக்கவாட்டில் நீட்டி பாதுகாப்பு விசையை நீக்கினான். மீசையைத் தடவியபடி காத்திருக்கத் தொடங்கினான்.
“ட்டப்... ட்டப்...”
துப்பாக்கி சத்தம் நெருங்கியது. சட்டென்று புரண்டுபடுத்து, முதுகை தரைக்குக்கொடுத்து, கால்களால் சுவற்றில் உதைத்து, அந்தபாசி படர்ந்தஈரமான தரையில் சர்ர்ரென்று வழுக்கிக்கொண்டு போனபடியே சுட்டான். ‘ட்டப்..’ நடுவிலிருந்தவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்தான், ‘ட்டப்..’ இடதுபுறமிருந்தவன் கையிலிருந்த துப்பாக்கியைப் போட்டுவிட்டு வயிற்றைப் பிடித்தபடி விழுந்தான், ‘ட்டப்.., ட்டப்..’ வலதுபுறமிருந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு திரும்பி ஜோடியாக விழுந்தனர். சட்டென்று ஒருமுறை புரண்டு படுத்து தன் அருகில் விழுந்த தோட்டாவைத் தவிர்த்துவிட்டு ஐந்தமாவனை நோக்கிச் சுட்டான், அவன் தலையை பின்னால் வெட்டிவிட்டு நெற்றியில் ரத்தத்தை தெறித்தபடி விழுந்தான். இவன் ஆசுவாசமாக துப்பாக்கியை இறக்கினான்.
‘ட்டப்..’
ஒரு தோட்டா இவன் தோளை உரசியபடி சென்றது. சட்டென்று தலையை நிமிர்ந்து பார்த்தான். பின்னால் ஒருவன் நின்றிருந்தான். சடாரென புரண்டு படுத்து துப்பாக்கி பிடித்த கையை தலைக்குமேல் வீசி அவனைக் குறிபார்..... ‘ட்டப்..’. இவன் துப்பாக்கி பறந்துபோய் விழுந்தது. கையில் அமிலம் பட்டதுபோல் எரிந்தது, கையை எடுத்துப்பார்த்தான், ஒரே ரத்தம், வலி தாங்க முடியாமல் ‘ஆ...’வென கத்தியபடி கையை உதறினான்.
முழித்துக்கொண்டான். உடலெல்லாம் வேர்த்திருந்தது. ‘ட்டப்... ட்டப்...’ ஜன்னல் அடித்துக்கொண்டிருந்தது. ‘கனவு’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கை மட்டும் நிஜமாகவே வலித்தது.விளக்கைப்போட்டு கையைப் பார்த்தான், லேசாக வீங்கியிருந்தது. கனவு கண்டு சுவற்றில் குத்தியிருப்பதை உணர்ந்தான். கையை தடவி விட்டுக்கொண்டான். ‘ட்டப்..ட்டப்..’ இன்னும் அடித்துக்கொண்டிருந்த ஜன்னலை சாத்தி தாழிட்டான். கைகளை நீர் ஊற்றி கழுவினான். குளிர்ந்த நீர்வலிக்கு இதமாக இருந்தது.
‘ட்டப்... ட்டப்...’
மறுபடி ஜன்னல்கள் அடித்துக்கொண்டன, இந்தமுறை பக்கத்து அறையில். உஷாரானான்... சட்டென்று விளக்குகளை அணைத்துவிட்டு பாய்ந்துசென்று மேசைமேல் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தான். ‘கிளிங்..’ பாதுகாப்புவிசையை நீக்கினான். துப்பாக்கியை நீட்டியபடிபூனைபோல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துப் போனான். ஜன்னல் இன்னும் அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலை நெருங்கி சட்டென்று பாய்ந்துதுப்பாக்கியை நீட்டியபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான், தாழ்வாரம் காலியாய் இருந்தது.துப்பாக்கியை தாழ்த்திவிட்டு இடதுகையால் ஜன்னலை கவனமாக சாத்தித் தாழிட்டான். புருவத்தை நெரித்தபடி துப்பாக்கியின் பாதுகாப்புவிசையை திரும்ப பூட்டி அதனாலேயே கன்னத்தை சொறிந்துகொண்டான்.
“மடார்....”
துப்பாக்கியை படுக்கையில் போட்டுவிட்டு படுத்தவனை மறுபடி இன்னொரு சத்தம் எழுப்பியது. டக்கென்று துப்பாக்கியை வாரிக்கொண்டு கட்டிலுக்குக்கீழே குதித்தான். பாய்ந்துசென்று தாழ்வாரத்தின் விளக்கைப்போட்டான். உள்ளேயிருந்து ஒன்றும் தெரியவில்லை. கதவைத்திறந்துகொண்டு தாழ்வாரத்தில் குதித்து நின்றான். நேராக நீட்டிய இவனது கையில் துப்பாக்கி மூக்கை நீட்டிகொண்டிருந்தது.
தாழ்வாரத்தில் யாரும் இல்லை, இரண்டு பூந்தொட்டிகள் மட்டும் உடைந்திருந்தன. மெதுவாக அடியெடுத்து காலால் பூந்தொட்டியை தள்ளிப்பார்த்தான். தாழ்வாரத்தின்வெளியே எட்டிப்பார்த்தான். எதோ பின்புறமாக அசைவதுபோல் தெரிந்தது. திடீரென தாழ்வாரத்தின் படிக்கட்டை ஒட்டியிருந்த இரும்புக்கதவு அடித்துக்கொண்டது. இரண்டடி முன்னாள் வைத்து தாழ்வாரத்தின் இரும்புச்சட்டத்தில் கையை வைத்து கால்களை லாவகமாக காற்றில் வீசி தாவி கீழே குதித்தான்.
அந்த நான்கடி உயர தாழ்வாரத்திலிருந்து குதித்து எழுந்து துப்பாக்கியை கையில் பிடித்தபடி பின்புறமாக ஓடினான். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் படிக்கட்டு வந்தது, சுற்றிலும் பார்த்தவன் மேலே எட்டிப்பார்த்தான். ஏதோ அசைவதுபோல் இருந்தது. முதல் தளத்துக்கு வந்தவன் சுற்றிலும் தேடிப்பார்த்தான். ஒன்றும் சிக்கவில்லை. சரி என்று மேலே மேலே தேடி பத்து தளங்களை தேடிவிட்டான். யாரும் சிக்கவில்லை.
கால்கள் சலித்து நெஞ்சை இழுத்துக்கொண்டு மூச்சு வாங்கியது. தாகத்தில் தொண்டை ஒட்டிக்கொண்டதுபோல் இருந்தது. அருகிலிருந்த வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே கொஞ்சம் விசாரிக்கலாம் என்று நினைத்தான். அழைப்புமணியை அடித்தான், யாரும் வரவில்லை, கதவைத்தட்டிப் பார்த்தான், “ம்ஹும்” பலனில்லை. இவன் காவல்துறை மூளையில் சந்தேகமணி அடித்தது. மெதுவாக பலகணியில் நடந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். இருட்டில் உள்ளே ஒருவன் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. சந்தேகம் போய் தாகம் வந்தது, “ஏங்க..ஏங்க..” என்று கத்தினான். பலனில்லை. ‘அவன் தூங்குகிறானா, செத்துவிட்டானா?’ இவன் சந்தேக மூளை திரும்பியது. கொஞ்சநேரம் கத்திப்பார்த்துவிட்டு கோபம் அதிகமாகி ஜன்னலை ஓங்கி அடித்தான், இரண்டு மூன்று முறை அடித்தற்கு பலன் இருந்தது. உள்ளே இருந்தவன் முழித்துக்கொண்டான், விளக்கைப்போட்டுதனக்குள்எதோ பேசிக்கொண்டவனைப்பார்த்து இவன், “ஏங்க.. கொஞ்சம் தண்ணி வேணும் கதவ திறங்க” என்று அதிகாரமாய் சொன்னான். உள்ளே இருந்தவன் சாவகாசமாக எழுந்துவந்து, ஜன்னல் வழியாக இவனை முறைத்துவிட்டு ஜன்னலை சாத்திவிட்டுப்போனான்.
உள்ளே தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது, இவன் இன்னொரு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். உள்ளே இருந்தவன் கை கழுவிக்கொண்டிருந்தான். இவனுக்கு அவமானமும் கோபமும் மாறிமாறி வந்தது, “ஏன்டா வெண்ணை, நான் இங்க தண்ணிக்கு தவிச்சுட்டு இருக்கேன், நீ அங்க கைய கழுவிட்டு இருக்க, மரியாதையா கதவை திறக்கறியா இல்லை உன்ன சுட்டுத் தள்ளவா?” ஜன்னலை அறைந்தபடி கத்தினான்.
உள்ளே இருந்தவன் இதைக்கேட்டு சட்டென்று திரும்பி ஓடிப்போய் விளக்குகளை அணைத்தான். ஜன்னல் வழியாக இருட்டில் இவன் உற்று நோக்கினான். உள்ளே இருந்தவனின் கரிய உருவம் லேசாக மேசையை நோக்கி நழுவி அங்கிருந்து எதையோ எடுத்தது. ‘கிளிங்..’ துப்பாக்கி விசை விலகும் சத்தம் கேட்டது. இவனுடைய காவல் மூளைக்கு புரிந்தது, ‘உள்ளே இருப்பவன் எதோ ஒரு சமூக விரோத கும்பலை சேர்ந்தவன், ஒருவேளை அவன்தான் தன்னை கொல்ல சற்று நேரம் முன்பு தன் வீட்டுக்கு வந்தவன்’. ஒரு முடிவெடுத்தவனாய் ஜன்னலுக்கு கீழே அமர்ந்தான் துப்பாக்கியை பக்கவாட்டில் நீட்டி பாதுகாப்பு விசையை நீக்கினான்.
அந்த இருட்டின் அமைதியாலும், நுணுக்கமாக கேட்டு பழகிய இவன் காதுகளாலும் அவன் காலடி ஓசையை கேட்க முடிந்தது. ‘இதோ வருகிறான், இன்னும் மூன்றடி.... இரண்டடி... அவ்வளவுதான்’ என்று கணக்குப் போட்டு சட்டென்று திரும்பி துப்பாக்கியை உள்ளே நீட்டினான். இவன் நெற்றியில் உள்ளே இருந்து நீட்டிக்கொண்டிருந்த துப்பாக்கிமுனை இருந்தது. அவன் முகத்தை ஏறிட்டான், இவன் கை துப்பாக்கியை நழுவவிட்டது. இவனுக்கு தலையை சுற்றியது. உள்ளே இருந்தவன் துப்பாக்கியை எடுத்துவிட்டு ஜன்னலை சாத்திக்கொண்டு போய்விட்டான். இவன் தளர்ந்துபோய் பலகணியின் இரும்பு சட்டத்தில் சாய்ந்து உட்கார்ந்தான்.
திடீரென எதோ நினைத்தவனாய் எழுந்து பலகணியில் எட்டிப்பார்த்தான். கீழே எதோ கூட்டமாய் இருந்தது. சட்டென்று படிகளில் தாவி இறங்கி கீழே ஓடினான். கூட்டத்தில் புகுந்துபோய் என்னவென்று பார்த்தான். எவனோ கீழே விழுந்திருந்தான். ஒருகாலை மடித்து, ஒரு காலை நீட்டி, ஒரு கையை இடுப்புக்குக் கீழே நீட்டிக்கொண்டு ஒரு கையை தலைக்கு மேலே நீட்டிஅந்த நிலையிலும் கையிலிருந்ததுப்பாக்கியை விடாமல் விழுந்து கிடந்தவனின் முகத்தை குனிந்து பார்த்தான்.
ஒரு பக்கம் ரத்தத்தில் மிதந்து கொண்டிருந்தது, இன்னொரு பக்கத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். ஆம் அதே முகம், இங்கே விழுந்து கிடக்கும், சற்றுமுன் ஜன்னலின் உள்ளே தெரிந்த, இவன் தினமும் கண்ணாடியில் பார்க்கும் இவனுடைய முகம். முகமெல்லாம் வேர்ப்பதுபோல் இருந்தது. இதயம் வேகமாக துடித்தது. திரும்ப படிகட்டில் ஏறி ஓடினான். ‘அவன காப்பாத்தனும்’ என்று சொல்லிக்கொண்டான். அந்த வீடை அடைந்து பலகணியில் குதித்து ஜன்னலில் எட்டிப்பார்க்க ஓடினான். ஓடிய அவசரத்தில் காலில் எதோ இடறி விழுந்தது, என்னவென்று திரும்பிப்பார்த்தான்.
இரண்டு பூஞ்சட்டிகள் உடைந்திருந்தன.
பலகணியின் விளக்கு எறிந்தது, “வேண்டாம் வேண்டாம் வராதே” என்று இவன் கத்தினான். கையில் துப்பாக்கியோடு உள்ளே இருந்தவனின் உருவம் பலகணியில் முளைத்தது. இவன்“ஓ...”வென்று அழுதபடி அவனைக் கட்டிப்பிடிக்கப் பார்த்தான், முடியவில்லை. அவன் இவனைத்தாண்டிப்போய் பலகணியின் இருப்புச் சட்டத்துக்கு வெளியே எட்டிப்பார்த்தான். “ஆங்.. அங்கதான்.. கீழ பாரு... கீழபாரு.. நான் செத்துக்கெடக்கறேன்பாரு” என்று ஆர்வமாக சொல்லியபடி இவனும் கீழே எட்டிப்பார்த்தான். கீழே தரையை துடைத்துப் போட்டதுபோல் இருந்தது.
“அய்யோ அய்யோ கீழே குதிக்காதடா...” என்று இவன் அலறியது அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை. “ஓ..” வென்றுஅலறியபடிபலகணியின் இரும்புக்கதவில் இவன் தலையால் முட்டிக்கொண்டான். அவன் இவன் பக்கம் மெல்ல திரும்பிப் பார்த்தான். ஒரு எட்டு முன்னால் எடுத்துவைத்தான். இவன் ஆர்வமாக “வாடா.. வாடா.. இப்படியே படிக்கட்டு வழியா இறங்கி போயிடுவோம்...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் பலகணியின் இரும்புச் சட்டத்தில் கையை ஊன்றி கால்களை காற்றில் லாவகமாய் வீசி தாவி குதித்தான்.

Thursday, December 17, 2015

நீ வருவாயென... – அஷ்ரப்

          அநேக மதிய வேளைகளில் என் வேலை அவனைப் பார்ப்பதுதான்என்னை அவன் பார்க்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். அவனை அவன்  சொந்தக்கார பொண்ணு ஒருத்தி  சுத்தி சுத்தி வருவா, இவன் அவளை அவ்வளவாக கண்டு கொள்வது போல் இல்லைநான் ஒரு ஆணை ரசிக்கின்றேன் என்று சொன்னால் என்ன நினைப்பார்கள். குறிப்பாக என் தோழியர்கள்.   நினைக்கட்டும் அவர்களுக்கும் ரசிக்கும் எண்ணம் இருக்கும், இல்லையென்றால் வேறுயாரையாவது ரசிப்பார்கள் அல்லது வேறு எதையாவது ரசிப்பார்கள்..

                ஆனால் இரண்டு நாட்களாக அவன் வரவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம். என்ன செய்ய? யாரிடமும் போய் கேட்கமுடியவில்லை. சொல்லவும் முடியவில்லை. என் வகுப்பறை சன்னலில் வானம் முதல் கானகம் வரை தெரியும் ஆனால் எனக்கு அந்த சன்னல் அவனைப் பார்ப்பதற்கு மட்டுமே.. ஏதேனும் பிரச்சனையா என்று தெரியவில்லை, அவனையும் காணவில்லை அந்த பெண்ணையும் காணவில்லை...

                ஒரு வேளை அப்படி இருக்குமோ. அப்படி ஆகியிருந்தா நாம என்ன செய்ய முடியும்இரண்டு பேரும் சேர்ந்து நடந்து வருவார்கள். நான் அவனை மட்டும் பார்த்து கொண்டிருப்பேன்.

                ஏன் இப்படி எல்லாம் எண்ணங்கள் ஓடுகிறது என்று நினைக்கையில், அருகில் வந்துயேய் வாத்தி வந்துட்டார்யாஎன்று சொல்லியதும் நிகழ்வுகளை கவனிக்கலானேன்.

             கரும்பலகை வெள்ளை ஜிலேபிகளால் நிரம்பிக் கொண்டிருந்தது.

அவன் தலை, அழகான சுருள்முடி, கூர்மையான பார்வை, அவன் ஏதேனும் சத்தம் கேட்டு திரும்புவதும் ஒரு அழகுதான்.

                அவன் இருக்கும் நாட்களில் எப்படியும் மூன்று அல்லது நான்கு முறை நான் இருக்கும் திசை நோக்கி திரும்புவான்அவன் என்னை பார்க்க வேண்டும் என்று திரும்பியிருக்க மாட்டான். ஆனால் நான் என்னை பார்க்கவே அவன் திரும்புகிறான் என்று திரும்ப திரும்ப நினைப்பேன்.

                மாலை நேர விடுதலை மணி ஒலித்தது. கிளம்ப தயாராகும் போதும் அந்த சன்னலை பார்த்தவாறு நாளையாவது வருவான் என்று கிளம்பிவிட்டேன்எனக்கு பின்னால்இவன் மனுசங்களோட பழகுவானா?என்று என் நண்பர்கள் கிண்டலடிப்பது கேட்டது.

Tuesday, December 15, 2015

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
படைப்பரங்கம் மற்றும் கலந்துரையாடல்

அருப்புக்கோட்டை – தமிழ்க்குமரன் இல்லம்
2015 டிசம்பர் 19 – சனிக்கிழமை – மாலை 5.30மணி

‘சாதியும் வர்க்கமும்’ என்ற பொதுத் தலைப்பிலான கலந்துரையாடலின்…
முதல் அமர்வில்
துணைத் தலைப்புகளிலான விவாதக் குறிப்புகளை முன்வைக்க…

தோழர் முனியசாமி   – கிராமப்புறங்களில் வர்க்கம்
தோழர் மாணிக்       - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) சாதியம்
தோழர் அஷ்ரஃப்       - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) வர்க்கம்

கலந்துரையாடலை ஒருங்கிணைக்க தோழர்கள் ரமேஷும் வருணும்

வரவேற்கவும் நன்றி கூறவும தோழர்கள் தமிழ்க்குமரனும் கேகே’யும்

Wednesday, December 9, 2015

கலந்துரையாடல்...

2015 டிசம்பர் 5ஆம் நாள் நடைபெற்ற மாவிபக படைப்பரங்கில் தோழர் ஸ்ரீபதியின் சிறுகதை வாசிக்கப்பெற்றது.
தோழர் தமிழ்க்குமரனின் நாவல் பகுதி வாசிக்கப்பெற்றது.
மழை பெய்த போதிலும்கூட கூட்டத்தில் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
கலந்துரையாடலுக்கான தளத்தை தேர்வு செய்வதற்கான கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி ‘சாதியும் வர்க்கமும்’ என்பதை மையமாகக் கொண்டு இனிவரும் கூட்டங்களில் தோழர்கள் கீழ்கண்ட தளங்களில் கலந்துரையாடலுக்கான தங்களின் விவாதக்குறிப்புகளை முன்வைப்பார்கள்.

தோழர் முனியசாமி   – கிராமப்புறங்களில் வர்க்கம்
தோழர் மாணிக்       - மின்னணு ஊடகங்களில் சாதியம்
தோழர் அஷ்ரஃப்      - மின்னணு ஊடகங்களில் வர்க்கம்
தோழர் ஸ்ரீபதி         - அடையாளங்களை அழித்தல்

ரமேஷ் உள்ளிட்ட பிற தோழர்கள் தங்களுக்கான தளத்தினை விரைவில் கூறுவதாகக் கூறியிருக்கிறார்கள்.
பிற தோழர்களும் தங்களுக்கான தலைப்புகளைத் தெரிவிக்கலாம்.
அடுத்த கூட்டம் 2015 டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை மாலை நடைபெறும்.

இடம் தமிழ்க்குமரன் இல்லமாக இருக்கலாம். பின்னர் உறுதி செய்யப்படும்.

Thursday, December 3, 2015

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

2015 டிசம்பர் 5, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

வரவேற்க : தோழர் தினகரன்
நன்றிகூற : தோழர் ராஜ்
படைப்பரங்கை ஒருங்கிணைக்க : தோழர் கேகே
கலந்துரையாடலை ஒருங்கிணைக்க : தோழர் முனியசாமி

நவம்பர் 22 நிகழ்வு பற்றிய மீள்பார்வை
படைப்பரங்கம்
வரும் நாட்களின் கலந்துரையாடலுக்கான தலைப்புகளை இறுதிப்படுத்தல்
மேலும் சில நாடகங்களுக்கான பகிர்தலும், நாடகங்களை ஆவணப்படுத்தல் தொடர்பான உரையாடலும்

அனைவரையும் தோழமையுடன் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
+91 94431 84050 & +91 94421 84060