Tuesday, October 27, 2015

படைப்பரங்கமும் நூல்விமர்சனமும்

2015 அக்டோபர் 31ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில்
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி தமிழ்க்குமரன் இல்லத்தில்…

தமிழ்க்குமரனின் சிறுகதைத் தொகுப்பும்
மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றும்
நூல்விமர்சனத்திற்காக…

வரவேற்கவும் நன்றிகூறவும் தோழர்கள் தமிழ்க்குமரனும் அஷ்ரஃ’பும்

ஒருங்கிணைக்க தோழர் சுப்புராயுலு

தோழமையுடன் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
+91 94431 84050 & +91 94421 84060 & +91 94431 11200

எட்டுக்காலியும் இருகாலியும் – பாண்டூ

எட்டுக்காலியும் இருகாலியும்
ஒருவகையில் ஒன்றுதான்!

இருவரின் இருத்தல்
ஏதோ ஒரு மூலை விளிம்பில்
தொங்கியபடி!

எட்டுக்காலியின் இருத்தல்
எச்சிலால்!
இருகாலியின் இருத்தல்
வியர்வையால்!

அதன் இருப்பை
வலை என்றும்
இதன் இருப்பை
நிலை என்றும்
விளிக்கின்றனர்
ஒதுக்கியவர்கள்!
ஒடுக்கியவர்கள்!

புனிதமென்றும்
தூய்மையென்றும்
இவற்றினைத் துடைத்தெறிவதாய்
நீள்கிறது துடைப்பைகள்!

நோய் பரப்பும் பூச்சிகள்
சுதந்திரமாய்ச் சுற்றித் திரிய
இவைகளின் சுதந்திரத்துள்
மூக்கை நுழைத்து
அத்துமீறுகின்றன
தடிகள்!

தன்னினும் பெரி…ய
பூச்சியொன்றை
உணவாக்கிக் கொண்டிருக்கும்
எட்டுக்காலியைப் பார்க்கும்
ஏதோவொரு தருணத்தில்…

தன்னையுணர்ந்து
மீண்டெழலாம்
இருகாலியும்

கோடிக்காலியாய்! ! !

கவிதை - கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி – 12-09-2015

வெறிச்சோடிக் கிடக்கும்
பெருநகரத்தின்
எல்லாச் சாதித் தெருக்களின் வழி
வேடம் புனைந்த யானை
வருகிறது அசைந்து அசைந்து!

பூட்டிய வீடுகளுக்குள்ளும்
புகுந்து எதிரொலிக்கிறது
அதன் மணிச்சத்தம்;
புதைந்து கிடப்பவர்களையும்
வெளியே இழுத்து
உமிழ்கிறது!

தீர்த்தமென எண்ணியும்
புனிதமென புளகாங்கிதம் கொண்டும்
தன்னையும் மறந்து
தட்சனை வைக்கப்படுகிறது
பணிவுடன்!

வாகை சூடி
செறு வென்று
செல்கிறது அதிகாரமாய்!

Thursday, October 15, 2015

கடவுளும் மதமும் தலைப்பிலான நான்காவது கலந்துரையாடல்...

2015 அக்டோபர் 17ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் அருப்புக்கோட்டை மதிஇல்லத்தில்…

‘மதமும் கடவுளும்’ கலந்துரையாடலை ஒருங்கிணைக்க தோழர் முனியசாமி

‘மார்க்சிய நோக்கில் மதமும் கடவுளும்’
கலந்துரையாடலுக்கான விவாதக் குறிப்புகளை முன்வைக்க தோழர் மதி

வரவேற்கவும் நன்றிகூறவும் தோழர் கேகே’யும் அஷ்ரஃ’பும்

தோழமையுடன் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

maveepapa@gmail.com+91 9443184050 & +91 9442184060

Thursday, October 1, 2015

கடவுளும் மதமும் தலைப்பிலான மூன்றாவது கலந்துரையாடலும் படைப்பரங்கமும்

2015 அக்டோபர் 3ஆம் நாள் மாலை 6 மணி அளவில் அருப்புக்கோட்டை மதிஇல்லத்தில் படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

‘மதமும் கடவுளும்’ கலந்துரையாடலை ஒருங்கிணைக்க தோழர் விஜி

‘மார்க்சிய நோக்கில் மதமும் கடவுளும்’
கலந்துரையாடலுக்கான விவாதக் குறிப்புகளை முன்வைக்க தோழர் மதி

வரவேற்கவும் நன்றிகூறவும் தோழர் கேகே’யும் கருப்பசாமி’யும்

தோழமையுடன் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
+91 9443184050 & +91 9442184060