Friday, October 24, 2014

காத்திரமான விஷயங்களைப் பொழுதுபோக்காக மாற்றிவிடுகின்ற உத்தி - கத்தி - மதிகண்ணன்

          வழக்கமான விஜய் brand மசாலாவில் எப்படி சமூக நலச் சாம்பார் வைப்பது என்ற முயற்சியில் தீட்டப்பட்ட கத்தி கொஞ்சம் பதமாகத்தான் இருக்கிறது. கைப்பிடி துருப்பிடித்திருக்கிறது என்பதால் கத்தியைத் தொடும் நமது கையும் பத்திரமாகத் தப்பிக்க வேண்டும். தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் சினிமாவிற்குப் பழக்கப்படுத்தப்பட்ட நாம் கதிரேசனின் கதைக்குள் ரொம்பவும் நுழையக்கூடாது. திருடிவிட்டுக் கல்கத்தா சிறையிலடைக்கப்பட்டு அங்கிருந்து தப்பி வரும் தில்லாலங்கடி கதிரேசனின் மனமாற்றம் ஒத்துக்கொள்ளும் விதமாக பக்குவமாக சொல்லப்பட்டுள்ளது.
          ஒரு குருவி சாப்பிடக்கூட நெல்விளையாத கிராமம்தான் ‘தன்னூத்து’ என்று அறிமுகப்படுத்தப்படும் கிராமத்தின் விவசாய நிலத்தை காப்பாற்றப் போராடும் ‘ஹைட்ராலஸி’ படித்த ஜீவா. ஜீவாவிற்கு ஜீவாவை காணொளி மூலமாக அறிமுகப்படுத்தும் அறிமுகப் படலத்திலேயே ‘பக்கத்தில இருக்கிற 200 கிராமங்கள கார்ப்பரேட் கம்பெனி கபளீகரம் பன்னீருச்சு’ன்னு கார்ப்பரேட்டுக்கு எதிரான அல்லது அரசு வார்த்தைகளில் ‘வளர்ச்சிக்கு எதிரான’ வார்த்தைகளை விதைக்கிறார். இந்த ஜீவாவின்