Sunday, February 19, 2012

வாழ்வுரிமை - செல்வா


அம்பானிகளின் வீட்டில்
அடுப்பெரிக்க
மின்சாரம் இல்லையாம்...
முறைவாசல்
அலறுகிறது
கொள்ளைவாசல்
ரத்தக்கண்ணீர் வடிக்கிறது.

முதலாளிய  சுதந்திரம்
முலாம் பூசுகிறது
வேட்டை நாயின்
பின்புறத்தில்.

மூலதனத்திடம் கைகட்டி
அதிகார வர்க்கத்திடம் மண்டியிட்டு
முதலாளியத்தின் காலை நக்குகிறது
நீதி.

நீதிக்காக போராடும் 
எலும்புக்  கூடுகளே
ஜீவகாருண்ய இயக்கம்
நடத்திக் கொண்டிருக்கும் வரையில்
உங்கள் வாழ்வுரிமைகள்
உங்களுக்கில்லை.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment