Thursday, January 23, 2020

நகர்வு - கவிதை - சத்யா


ஒவ்வொரு முறை விசைப்பலகை அடிபடும்போதும்
பரிதாபப்பட்டு நகர்கிறது சுட்டி
அடிபட்ட தழும்பினை திரையில் பதித்து

இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து
உள்ளேனய்யா சொல்கிறது சுட்டி
அம்புக்குறியை உயிர்ப்பித்தபடி

அழுத்தி இழுக்கும்போதெல்லாம்
நகர்ந்து உருண்டு போகிறது
உலக வரைபடம்

உருட்டும்போதெல்லாம்
சரசரவென்று ஏறி
தலைதாண்டிக் காணாமல் போகின்றன எழுத்துக்கள்

அடித்தாலும்
இழுத்தாலும்
நகர்த்தினாலும்
உருட்டினாலும்
நகராமல் இருக்கின்றன கண்கள்

No comments:

Post a Comment