Monday, January 6, 2020

குறுங்கவிதைகள் - இவான்சங்கர்


0
செடி பிரிந்து
தரை சேரும் பூ
இன்னும் பூவாகவே இருக்கிறது.
0
மின்னல் இடியுடன் பெருமழை
நீரோடை துறந்த ஊர்
அகதியாகும் சின்னஞ் சிறு மீன்.
0
நிறைந்தது; குறைந்தது;
வற்றியது - எல்லாம்
அதே குளம்தான்.
0
கடுந்தவம் புரிகிறது
மழை வேண்டி -
விதை
0
2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற இவான்சங்கரின் குறுங்கவிதைகள்

No comments:

Post a Comment