Monday, July 25, 2011

எல்லாம் விதி வசம் - விஜி




விதிகள் நியாயமானவை – ஆனால்
விதிகளின் விளையாட்டில்
நியாயங்கள் வெல்வதில்லை.

நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குப் பின்னே
நிர்ணயிக்கப்படா விதிகளுண்டு
வெற்றியைத் தீர்மானிக்க.

உலகையே தன்
சூட்சுமக் கரங்களால்
கட்டியாளுவது விதி.

விதிகள் சிக்கலானவை
நோக்கத்தில் எளிமையாக
பார்வைக்குக் கடினமாக
நடைமுறைக்குச் சவாலாக
விதிகள் சிக்கலானவைதான்.

விதிப்பவரையும் சிக்க வைக்க
வலியது விதி.
காலம் மாற சூழல் மாற
மாறிக் கொள்ளும் விதி…

விதித்ததை மாற்றி
புதிதாய் விதிக்க
தேவை விதிக்கான மதி.

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment