Monday, July 25, 2011

இருக்குமிடத்திற்கேற்ப - கேகே



இவர்களாயிருக்க விழைகிற அதே கணத்தில்
அவர்களாயும் இருக்க விழைகிறாய்
என்ன இது?
நியூட்டனின் ஆப்பிள் நகைக்கிறது
சிரிப்பொலியைப் பிடித்துத் தொங்குகிற
குட்டிச் சாத்தான் பல்லிளித்துச் சிரிக்கிறது.
வெள்ளத்தில் வந்த மீன்
நீந்தவில்லை குளத்திற்கு வர.
எப்படி மாறுகிறாய் இவ்வளவு எளிதாய் –
நியூட்டனின் ஆப்பிளும் ஏவாளின் ஆப்பிளும்
ஒரே சுவையா?
தூண்டிலில் சிக்கிய போதும்
குளத்துமீன் துள்ளவில்லை.




(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment