Tuesday, September 6, 2011

பெண்சிசுவின் குரல் - கவிதா



தாயின் கருவறைக்குள்ளும்
எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை
பாசத்திற்காக எங்களைப் பெற்றெடுத்ததுபோக
அரசு தரும் இலவசத்திற்காக பெற்றெடுக்கும் அவலம்.
சமூகத்திற்குப் பயந்து எங்களை
கொல்லத் துணியும் தாய்மார்களின்
நிலையோ பரிதாபம்.
வாய்ப்புகள் வாசலில் இருத்தாலும்
வரவேற்க ஆயிரம் தடைகள்.
கொல்லும் எண்ணத்தை மாற்றி
வாழ வாய்ப்புக் கொடுங்கள்.
கேள்விக்குறியாய் அல்ல
ஆச்சர்யக் குறியாய் வாழ்ந்து காட்டுகிறோம்.

(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment