Tuesday, September 6, 2011

கவிதைகள் - பா.ராஜேந்திரன்

ஆயுதம்...
விநாயகர்சிலை
இந்துத்தவாக்களின்
கலவரக் கருவி...

மாற்று மத வீதிகளில்
இழுத்துவரத் துடிக்கிறது
மதவெறி

என்றோ
எழுதப்பட்டுவிட்டது
விநாயகர் சிலையும்
ஆயுதமென்று.

ஜோதிடர் வீடு
மன அழுத்தங்களை
சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு
தான் மிகவும்
பாதிக்கப்ட்டிருப்பதாக உணர்ந்து
தாக்கத்திலிருந்து விடுபட எண்ணி
மீளவே முடியாத
புதை குழிக்குள் – தானே
வலியச் சென்று
சிக்கிக்கொள்ளும் இடம்.

குருதிக் கொடை
தனக்கோ
தன்னைச் சார்ந்தவருக்கோ
குருதிக்கான தேடல்
தொடங்கும் வரை
எங்குபார்க்கினும்
பணத்திறகான
பரிமாற்றமாகவே
பரவி வரும் செய்தி.

(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதைகள்)

No comments:

Post a Comment