Sunday, July 1, 2012

பொய் முகம் – லண்டன் செல்வா

கரைந்து போன
பொழுதுகளில்
உதிர்க்கப்பட்டவைகள்
அனைத்தும்
நினைவுகள்
காகிதங்களில்
உயிர் பெறுகிறது
எழுத்துக்களாய்

பொய் முகத்தால்
உரைக்கப்பட்ட
கயமைகள்
எவர் மனதில்
ஆட்கொண்டுவிடுமோ...
என்ற
அச்சம் கூட
விரட்டுகிறது.

பாரமாய்
அழுத்தும்
சுமைகளை
இறக்கிவைக்க
சுமை தாங்கி கற்களை
தேடுகிறது
மனம் .

இறுகிப்போன
சுமை தாங்கி கற்கள்
நடுக்கத்துடன்
பொய் முகத்தின்
நகைப்பைக்கண்டு
(2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment