Sunday, July 1, 2012

காத்திருக்கும் கனவு - விஜி

சித்தாந்தக்  கனவு
நூற்றாண்டுகளாய் காத்திருக்கிறது
தன்னை தானே வார்த்தபடி...
சமூகம் குறித்த
சிந்தனைகளை கிளறி
நம்மை உறங்க விடாத கனவிது

வீறு கொண்டு எழச் செய்யும்
விடுதலைக்  கனவிது

மானுடத்தின் முழு அறிவையும்
தனக்குள் கொண்ட  கனவிது

உழைப்பை உன்னதப் படுத்தும்
உயர்ந்த கனவிது

அன்பை தனக்குள் நிறைத்திருக்கும்
அற்புதக் கனவிது

ஏற்றத்தாழ்வு இல்லா
சமத்துவக்  கனவிது

செயலூக்கம் மிக்க
சிந்தனைக்  கனவிது

இழப்பதற்கே  இணையும்
இணையற்றக்  கனவிது

உதிரம் சிந்தி வளர்த்த
உன்னதக்  கனவிது

தன்னை கரைத்து தோழர்கள் கொடுத்த
புரட்சிக் கனவிது

எத்தனைக் கரங்கள் மாறி வந்தாலும்
மாற்றுக் குறையா கனவிது 

கனவை நனவாக்கும்
தொடர்ந்த முயற்சியில்
நமது முறையிது

கனவின் வெம்மை
தொடர்ந்து தூண்டுகிறது
சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும்.............
(2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment