Tuesday, December 29, 2020

மீண்டும் கதவு - மின்னிதழாக...

               ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் முயல வேண்டியிருக்கிறது - லூயி மால்

அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வணக்கம்

1998 மார்ச் தொடங்கி 2012 இறுதிவரை வெளிவந்த ‘கதவு’ இதழ் மீண்டும் மின்னிதழாக ‘மாவிபக’ தோழர்களின் முயற்சியால் 2021 ஜனவரி முதல் தொடங்கப்படவிருக்கிறது. பொங்கல் நாளில் வலையேறவிருக்கிறது.

தங்கள் படைப்புகள் மற்றும் எழுத்துகள் வழியாக நீங்களும் எங்களின் பயணத்தில் இணைய வேண்டுமாய் அழைக்கின்றோம்.

படைப்புகளை pdf ஆகவோ image ஆகவோ அனுப்ப வேண்டாம்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

ஆசிரியர் – கதவு’க்காக

+91 9443184050

editorkathavu@gmail.com

No comments:

Post a Comment