Thursday, December 24, 2020

இனிய பண்பாளர் தொ.ப இன்னுயிர் நீத்தார்.


தமிழினத்தின் பண்பாடு தொடர்பான வரலாற்று ரீதியான தரவுகளை அறிவுத் தளத்திலும் உணர்வுத் தளத்திலும் அனைவருக்கும் கற்பித்த இனிய பண்பாளர் தொ.பா என்று அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் தொ.பரமசிவம் இனி மனித உடலுடன் நம்முடன் இல்லை.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார், நண்பர்கள், மாணவர்களுடன் கல்விப் புலத்திற்கு வெளியில் அவரிடம் கற்ற மாவிபக’வும் ஆழ்ந்த வருத்தத்தைத் பதிவு செய்கிறது.

அவரது உரைகளின் வழியாகவும் எழுத்துகள் வழியாகவும் நாம் தொடர்ந்து பண்பாட்டு அசைவுகளின் தாக்கத்தை உணர்ந்து செயல்படுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment