Wednesday, December 16, 2020

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் விருதுகள் 2020-21


அன்பு எழுத்தாளர்களே…

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் கடந்த ஆண்டு சிறுகதை தொகுப்புகளில் நான்கிற்கும் தோழர் குபா நினைவு விருதும் கவிதைத் தொகுப்புகளில் நான்கிற்கும்  தோழர் சுப்புராயுலு நினைவு விருதும் வழங்கிச் சிறப்பித்தது.

இநத ஆண்டில் கொரோனோ, நாடடங்கு போன்ற காரணங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நூல்கள் வெளியாகவில்லை. நாங்கள் அறிந்த வரையிலும் வெளியான ஒரு சில நூல்களில் பலவும் கொரோனோவைப் பின்னனியாகக் கொண்டவையாக இருக்கின்றன.

ஆதலால்…

2020-21 இரண்டு ஆண்டுகளுக்கும் இணைந்ததாக விருதுகள் தொடர்பான அறிவிப்பு 2021 செப்டம்பரில் வெளியாகும். அதற்குள்ளாகவே சில தோழர்கள் நூல்களை அனுப்பிவிட்டார்கள். தவறில்லை. விருதுக்கான நூல்களை அனுப்புபவர்கள் 2020-21 விருதுகள் தேர்விற்காக என்ற குறிப்புகளுடன் 2 பிரதிகள் அனுப்புங்கள். விருதுகள் தேர்விற்காக என்ற குறிப்புகள் இன்றி வரும் நூல்கள் அன்பின் காரணமாக அனுப்பப்பட்டதாகக் கருதப்படும்.

குறிப்புகள் அனுப்பத் தவறிய நண்பர்கள் / தோழர்கள் தொலைபேசி / மின்னஞ்சல் வழியாகவாவது தகவல் தரவும்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

94431 84050

maveepaka@gmail.com

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

No comments:

Post a Comment