Thursday, March 12, 2020

வேதமும் சாத்தானும் – கவிதை - சத்யா


அந்த வேதம்
சாத்தானை ஓதிக்கொண்டிருக்கின்றது 

தித்திக்கும் பாவக்கனியை ஊட்டிய தேவனை
சங்கு சக்கரங்களால் வெட்டி
பூமியை சுற்றவைத்த

பிட்டுக்கு சிலுவை சுமந்து
பெற்ற சவுக்கடியை
உலகுக்கே பகிர்ந்த

வௌவால் சிலுவையில்
தொங்கிய நோன்பை
சிரமறுத்து உதிரம் குளித்த

ஊமைகளைப் பாடவைக்கப்
திருப்பாலீந்த

பகைவர்க்கும் அன்பு செய்யும்
அன்பேயான

மலைப்பிரசங்கத்தை சுண்டுவிரலில்
நிகழ்த்திய

மேய்ப்பனும்
ரட்சகனும்
உற்சவனுமான

சாத்தானை
வேதம் ஓதிக்கொண்டிருக்கின்றது

No comments:

Post a Comment