Thursday, February 13, 2020

விடைபெற்ற தோழமை - விஜி - அஞ்சலி - கவிதை



மரணிக்கவில்லை
சுப்புராயுலு தோழரின்
வாழ்க்கையும் வரிகளும்..

சொற்செட்டுகளில்
அடைபடா ஆளுமை
குன்றா வாசிப்பு
தளரா சிந்தனை

வரலாறாய் விரியும் வார்த்தைகள்...
வாழ்வின் சிடுக்குகளில் களையா கவிமனம்...
உடனிருந்த பொழுதெல்லாம் ததும்பும் உரையாடல்
வெளிப்படுத்தாத சொற்களின் அழுத்தத்தில்
கனத்து கிடக்கிறது மனது...

கொப்பளித்து வரும் உணர்வுகளை
கொட்டித் தீர்க்க வழியற்று சுழன்று திரிகின்றன நினைவுகள்...
என்ன சொல்லி மனமாற...
என்ன சொல்லி நடைபோட...

நீளும் பயணத்தில்
நீங்கா நினைவுகளுடன்
நமது திசைவழியில்
தொடர்கிறது வாழ்வின் பயணம்
தோழரின் இழப்போடும்
தோழமையின் பிடிப்போடும்....
(பிப்ரவரி 13 - 2020 - தோழர் சுப்புராயுலுவின் முதலாண்டு நினைவுநாள்)

No comments:

Post a Comment