Wednesday, December 9, 2015

கலந்துரையாடல்...

2015 டிசம்பர் 5ஆம் நாள் நடைபெற்ற மாவிபக படைப்பரங்கில் தோழர் ஸ்ரீபதியின் சிறுகதை வாசிக்கப்பெற்றது.
தோழர் தமிழ்க்குமரனின் நாவல் பகுதி வாசிக்கப்பெற்றது.
மழை பெய்த போதிலும்கூட கூட்டத்தில் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
கலந்துரையாடலுக்கான தளத்தை தேர்வு செய்வதற்கான கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி ‘சாதியும் வர்க்கமும்’ என்பதை மையமாகக் கொண்டு இனிவரும் கூட்டங்களில் தோழர்கள் கீழ்கண்ட தளங்களில் கலந்துரையாடலுக்கான தங்களின் விவாதக்குறிப்புகளை முன்வைப்பார்கள்.

தோழர் முனியசாமி   – கிராமப்புறங்களில் வர்க்கம்
தோழர் மாணிக்       - மின்னணு ஊடகங்களில் சாதியம்
தோழர் அஷ்ரஃப்      - மின்னணு ஊடகங்களில் வர்க்கம்
தோழர் ஸ்ரீபதி         - அடையாளங்களை அழித்தல்

ரமேஷ் உள்ளிட்ட பிற தோழர்கள் தங்களுக்கான தளத்தினை விரைவில் கூறுவதாகக் கூறியிருக்கிறார்கள்.
பிற தோழர்களும் தங்களுக்கான தலைப்புகளைத் தெரிவிக்கலாம்.
அடுத்த கூட்டம் 2015 டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை மாலை நடைபெறும்.

இடம் தமிழ்க்குமரன் இல்லமாக இருக்கலாம். பின்னர் உறுதி செய்யப்படும்.

No comments:

Post a Comment