Thursday, December 17, 2015

நீ வருவாயென... – அஷ்ரப்

          அநேக மதிய வேளைகளில் என் வேலை அவனைப் பார்ப்பதுதான்என்னை அவன் பார்க்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். அவனை அவன்  சொந்தக்கார பொண்ணு ஒருத்தி  சுத்தி சுத்தி வருவா, இவன் அவளை அவ்வளவாக கண்டு கொள்வது போல் இல்லைநான் ஒரு ஆணை ரசிக்கின்றேன் என்று சொன்னால் என்ன நினைப்பார்கள். குறிப்பாக என் தோழியர்கள்.   நினைக்கட்டும் அவர்களுக்கும் ரசிக்கும் எண்ணம் இருக்கும், இல்லையென்றால் வேறுயாரையாவது ரசிப்பார்கள் அல்லது வேறு எதையாவது ரசிப்பார்கள்..

                ஆனால் இரண்டு நாட்களாக அவன் வரவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம். என்ன செய்ய? யாரிடமும் போய் கேட்கமுடியவில்லை. சொல்லவும் முடியவில்லை. என் வகுப்பறை சன்னலில் வானம் முதல் கானகம் வரை தெரியும் ஆனால் எனக்கு அந்த சன்னல் அவனைப் பார்ப்பதற்கு மட்டுமே.. ஏதேனும் பிரச்சனையா என்று தெரியவில்லை, அவனையும் காணவில்லை அந்த பெண்ணையும் காணவில்லை...

                ஒரு வேளை அப்படி இருக்குமோ. அப்படி ஆகியிருந்தா நாம என்ன செய்ய முடியும்இரண்டு பேரும் சேர்ந்து நடந்து வருவார்கள். நான் அவனை மட்டும் பார்த்து கொண்டிருப்பேன்.

                ஏன் இப்படி எல்லாம் எண்ணங்கள் ஓடுகிறது என்று நினைக்கையில், அருகில் வந்துயேய் வாத்தி வந்துட்டார்யாஎன்று சொல்லியதும் நிகழ்வுகளை கவனிக்கலானேன்.

             கரும்பலகை வெள்ளை ஜிலேபிகளால் நிரம்பிக் கொண்டிருந்தது.

அவன் தலை, அழகான சுருள்முடி, கூர்மையான பார்வை, அவன் ஏதேனும் சத்தம் கேட்டு திரும்புவதும் ஒரு அழகுதான்.

                அவன் இருக்கும் நாட்களில் எப்படியும் மூன்று அல்லது நான்கு முறை நான் இருக்கும் திசை நோக்கி திரும்புவான்அவன் என்னை பார்க்க வேண்டும் என்று திரும்பியிருக்க மாட்டான். ஆனால் நான் என்னை பார்க்கவே அவன் திரும்புகிறான் என்று திரும்ப திரும்ப நினைப்பேன்.

                மாலை நேர விடுதலை மணி ஒலித்தது. கிளம்ப தயாராகும் போதும் அந்த சன்னலை பார்த்தவாறு நாளையாவது வருவான் என்று கிளம்பிவிட்டேன்எனக்கு பின்னால்இவன் மனுசங்களோட பழகுவானா?என்று என் நண்பர்கள் கிண்டலடிப்பது கேட்டது.

No comments:

Post a Comment