Tuesday, October 27, 2015

கவிதை - கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி – 12-09-2015

வெறிச்சோடிக் கிடக்கும்
பெருநகரத்தின்
எல்லாச் சாதித் தெருக்களின் வழி
வேடம் புனைந்த யானை
வருகிறது அசைந்து அசைந்து!

பூட்டிய வீடுகளுக்குள்ளும்
புகுந்து எதிரொலிக்கிறது
அதன் மணிச்சத்தம்;
புதைந்து கிடப்பவர்களையும்
வெளியே இழுத்து
உமிழ்கிறது!

தீர்த்தமென எண்ணியும்
புனிதமென புளகாங்கிதம் கொண்டும்
தன்னையும் மறந்து
தட்சனை வைக்கப்படுகிறது
பணிவுடன்!

வாகை சூடி
செறு வென்று
செல்கிறது அதிகாரமாய்!

No comments:

Post a Comment