Sunday, September 27, 2015

கடவுளும் மதமும் தலைப்பிலான இரண்டாவது கலந்துரையாடலும் படைப்பரங்கமும்

2015 செப்டம்பர் 26ஆம் நாள் மாலை 6 மணி அளவில் அருப்புக்கோட்டை மதிஇல்லத்தில் படைப்பரங்கமும் கலந்துரையாடலும் நடைபெற்றன.

படைப்பரங்கில் தோழர் தமிழ்க்குமரன் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் இரண்டு அத்தியாயங்களை வாசித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ‘மதமும் கடவுளும்’ கலந்துரையாடலை தோழர் விஜி முறையான  தொடக்கவுரையுடன் ஒருங்கிணைத்தார்.

கலந்துரையாடலின் முதல் கட்டுரையாக ‘அம்பேத்காரிய நோக்கில் மதமும் கடவுளும்’ என்ற தலைப்பில் ரமேஷ் தன் கருத்துரையை முன்வைத்தார்.

தொடர்ந்து ‘பெரியாரியல் நோக்கில் மதமும் கடவுளும்’ என்ற தலைப்பிலான தனது முன்வைப்பை தோழர் கேகே பகிர்ந்து கொண்டார்.

இரண்டு முன்வைப்புகளின் மீதான விவாதம் பல்வேறு திறப்புகளுக்கு வழிவகுப்பதாய் அமைந்தது. ‘மார்க்சிய நோக்கில் மதமும் கடவுளும்’ என்ற தலைப்பிலான தோழர் மதியின் விவாதக் குறிப்பு எதிர்வரும் அமர்வில் தொடரவுள்ளது.

No comments:

Post a Comment