Wednesday, January 4, 2012

கவிதை - பா.ராஜேந்திரன்

நாம் நம்புகிறோம் என்பதற்காக
நாயைக் கடவுள் என்கிறான்...

நாம் நம்புகிறோம் என்பதற்காக
மலம் தின்னும் பன்றியைக் கடவுள் என்கிறான்...

நாம் நம்புகிறோம் என்பதற்காக
நாமம் அடிக்கப்பட்ட கல்லைக் காட்டி
கடவுளென்று கூறி காசு பறிக்கிறான்...

நம்மீது நாம் நம்பிக்கை வைக்காதவரை
நமக்கே நாமம் இட காத்திருப்போர் பலருண்டு...

கண்டு கொள்வீர் கண் விழிப்பீர்...

(2011 டிசம்பர் 25 மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment