Tuesday, December 24, 2019

விருதுகள் 2019 - மாவிபக திட்டமிடல் கூட்ட முடிவுகள்



2017 டிசம்பர் 22ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் திட்டமிடல் அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி
தோழர் கு.பா. நினைவு சிறுகதைத் தொகுப்புகள் விருதுக்காக தேர்வு நூல்களின் பட்டியலையும் தோழர் சுப்புராயுலு நினைவு கவிதைத் தொகுப்புகள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பட்டியலையும் நடுவர் குழு 2020 ஜனவரி முதல்வாரம் முடிவடைவதற்குள் ஒப்படைக்க வேண்டும்.
தேவையின் அடிப்படையில் நடுவர் குழுவின் சந்திப்பு 2020 ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடைபெறும்.
விருதுகள் 2019ன் முடிவுகள் பொங்கலை ஒட்டி நமது இணைய தளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.
விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் முதல்நாள் முழுநாள் நிகழ்வாக அருப்புக்கோட்டையில் நடைபெறும்.
2020 மார்ச் 1 – ஞாயிற்றுக் கிழமை
ü  விருதுகள் வழங்கும் நிகழ்வு தோழர் பாட்டாளியின் தலைமையில் நடைபெறும்.
ü  நடுவர் குழுவின் சார்பாக சிறுகதைத் தொகுப்புகளின் தேர்வு பற்றி தோழர் சத்யா, கவிதைத் தொகுப்புகளின் தேர்வு பற்றி தோழர் கேகே இருவரும் உரையாற்றுவார்கள்.
ü  விருதுபெறும் எழுத்தாளர்கள் தங்கள் ஏற்புரையை சமர்ப்பிப்பார்கள்.
ü  கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி – நடுவர்குழு நிகழ்வு நாளில் அறிவிக்கப்படும். கவிதைகளுக்கான தலைப்புகள் முன்னதாகவே கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கவிதை வாசிக்கும் மாணவர்கள் அடையாள அட்டையுடன் வரவேண்டும். வாசிக்கும் கவிதையின் ஒரு பிரதியை வாசிப்பதற்கு முன்னதாகவே, நடுவர் குழுவிடம் கொடுக்க வேண்டும்.
ü  சிறுகதை / கவிதைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறும். சிறுகதைகள் குறித்து உயிர் எழுத்து இதழின் ஆசிரியர் தோழர் சுதீர் செந்தில் அவர்களும் கவிதைகள் குறித்து நவீன கவிதைகளின் முன்னோடிக் கவிஞர் தோழர் யவனிகா ஸ்ரீராம் அவர்களும் உரையாற்றுவார்கள்.
ü  இவர்களுடன் சிறுகதைத் தொகுப்பிற்காக விருதுபெற்றவர்களில் ஒருவரும் கவிதைத் தொகுப்பிற்காக விருதுபெற்றவர்களில் ஒருவரும் கருத்துரையாற்றுவார்கள்.
ü  நிகழ்விற்கு தோழர் மதிகண்ணன் தலைமை வகிப்பார்.
மேற்கண்ட மூன்று நிகழ்வுகளின் வரிசைப்படுத்தல் பின்னர் இறுதி செய்யப்படும்.
ü  நிகழ்வில் வரவேற்க தோழர் ராமராஜ்
ü  நன்றிகூற தோழர் அஷ்ரஃப்தீன் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment