Friday, March 1, 2019

விழிப்புணர்வுக் கருத்தரங்கு

             இன்று ஆதி திராவிடர் நலத்துறை கல்லூரி விடுதி மாணவர்களுக்கான போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் விருதுநகரில் நடைபெற்றது. துணை ஆட்சியர் திருமிகு செல்வி லட்சுமி ப்ரியா தலைமை தாங்கினார்கள். போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் தோழர் பரிமளச்செல்வன், தோழர்.மதிகண்ணன் இருவரும் மாணவர்களிடையே எது போதை? எந்த போதை நம்மை வீழ்த்தும், எது நம்மை வழிநடத்தும் என கல்லூரி மாணவரிடையே அருமையாகப் பேசினர். இளம் பத்திரிகையாளர் நண்பர் விநாயக்பாபு வளர்ச்சிக்கான விஷயங்கள் பற்றிக் கலந்துரையாடினார். நிகழ்ச்சி நிறைவாக இருந்தது.















No comments:

Post a Comment