Saturday, July 2, 2016

எப்படி அழைப்பது? - மதிகண்ணன்

மிகச் சாதாரண விஷயங்களை
நுட்பமாகவும்
நுட்பமான விஷயங்களை
மிகச் சாதாரணமாகவும்
சொல்பவர்களை
எப்படி அழைப்பது?

வாத்தி
சட்டாம்பிள்ளை
… … …
ஞாயஸ்தன்
நீதிமான்
… … …
குழப்பவாதி
வளவளா கொலகொலா
… … …
படைப்பாளி
பைத்தியம்
… … …
அழைப்பது எப்படி என்றாலும்
உரைப்பது தத்துவம்தானே?

No comments:

Post a Comment