Saturday, February 6, 2016

கவிதை - மதிகண்ணன்


புல்லின் மேலொரு பனித்துளி
கண்டதும் கவிதை வடிக்கிறாய்
அழகியல் பேசுகிறாய்…
அற்புதம் என்கிறாய்…
பகிர்ந்து கொள்கிறாய்.

புல்லின் சுமையை உணரும் நான்
பனித்துளியின் தள்ளாட்டத்திற்குத் தலையசைக்கிறேன்
மௌனமாய்ச் சிரித்தபடி
நிலையாமை உணர்ந்தபோதும்…

1 comment: