Friday, January 8, 2016

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

          மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் 2016 ஆம் ஆண்டின் முதல் படைப்பரங்கக் கூட்டம் முதல் ஞாயிறான ஜனவரி 3 ஆம் நாள் நடைபெற்றது. படைப்பரங்கில்…

          தோழர் சுப்புராயுலு ‘குழந்தை’ என்ற தலைப்பில் கவிதையும்

          தோழர் மாணிக் 2004 ஜனவரி 29ன் நாட்குறிப்பையும்

          தோழர் தமிழ்க்குமரன் ‘கடூழியம்’ நாவலின் இரண்டு அத்தியாயங்களையும்

          தோழர் மதிகண்ணன் ‘எழுத்துப் பிழை’ என்ற கதையையும்

          தோழர் சத்யா ‘18’ என்ற தலைப்பிலான அறிவியல் புனைகதையின் பகுதியையும் வாசித்தனர்.

          தோழர் வருண் ஒருங்கிணைத்த படைப்பரங்கில் தோழர்கள் படைப்புகளின் மீதான தங்கள் பார்வையைப் பதிவு செய்தனர்.

          தொடர்ந்து தோழர் மாணிக் சமூக வலைத் தளங்களில் சாதியம் என்ற தலைப்பிலான தன் விவாதக் குறிப்புகளை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.

          தொடரும் கருத்தரங்கில் தோழர் அஷ்ரப் சமூக வலைத் தளங்களில் வர்க்கம் என்ற தலைப்பிலான தன் விவாதக் குறிப்புகளையும்

          தோழர் முனியசாமி கிராமங்களில் வர்க்கம் என்ற தலைப்பிலான தன் விவாதக் குறிப்புகளையும் முன்வைக்க உள்ளனர்.

No comments:

Post a Comment