Monday, June 22, 2015

படைப்பரங்கம்

          நீண்ட இடைவேளைக்குப் பின்னர் 2015 ஜூன் 21 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை (நேற்றுதானே?) அருப்புக்கோட்டை மாவிபக கிளைச் செயலர் தோழர் கேகே ஒருங்கிணைப்பில் படைப்பரங்கம் நடைபெற்றது. படைப்பரங்கில் படைப்புகளுடன் தோழர் சுப்புராயுலு, தோழர் மாணிக், தோழர் சத்யா, தோழர் வருண் மற்றும் தமுஎகச அருப்புக்கோட்டை கிளையின் தலைவர் தோழர் தமிழ்க் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
            பல்வேறு காரணங்களுடன் படைப்புகள் ஏதுமின்றி தோழர் மதிகண்ணன், தோழர் ரமேஷ், தோழர் அஷ்ரஃப், தோழர் கேகே மற்றும் சில தோழர்களும் கலந்து கொண்டனர். படைப்பரங்கமும் படைப்புகளின் மீதான விமர்சனமும் மிகவும் காத்திரமான இருந்தது. அதுபற்றி விரிவாக பின்னர் பேசலாம்.
            விரைவில் படைப்புகளில் சில நமக்கான தளத்தில் (http://maanudaviduthalai.blogspot.in/ வலைப்பூவில் - இங்கதோனே?) வலையேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிறை மாதாந்திர படைப்புகளுக்கான நாளாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியாவது எழுதவும், படைக்கவும் வைத்துவிடலாம் என்ற ஆசைதான். இது சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டதாக முடிந்துவிடக்கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டி உள்ளது. பார்க்கலாம்.

No comments:

Post a Comment