Monday, December 23, 2013

பட்ட மனம் – சுட்ட நிஜங்கள்.... - வேழம்

படம் : ஜென்னிமா
நிஜங்களல்ல என நிஜங்களை
நிராகரித்த வேளையில்…
கனவுலகில் கவிழ்ந்திருந்தேன்.
கண்மூடிவிட்டால் – கவலையே
கடுகளவுகூட இல்லையே…
ஆழமான எண்ணம்!...
போலியான யதார்த்தம்
காலியாக வேண்டும்.
நடிப்பு நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்.
நடிக்கத் தெரியாத அவலம்,
நடிப்பென்று தெரிந்தால் கேவலம்.

No comments:

Post a Comment