Monday, December 23, 2013

எனக்கு நானே சொல்லிக் கொண்டது - கேகே

படம் : ஜென்னிமா

               சிறகை இழந்துவிட்ட மனசு
               எப்படிப் பறக்கும்?
               யௌவனத்தின் பாதையில்தான்
               எத்தனை முட்கள்.
               கஷ்டம்தான் கலங்கியதில்லை.
               தூரத்துப் பச்சை அல்லது
               பாலைவனச் சோலை அல்லது ஏதோ ஒன்று.
               மெல்லிய சிலிர்ப்பில் உடல் மிளிர்ந்து
               எழுந்துவிட்டான் அவன்
               சிறிய புன்னகையில் உதிர்ந்தன வடுக்கள்.
               சிறகே உதிர்ந்து விட்டாலும்
               பறக்கத்தான் துடிக்கும் மனசு.
               வெளி வியாபித்திருக்கிறது
               வரவேற்க.

No comments:

Post a Comment