Thursday, March 1, 2012

மகரந்த கணம் – செந்தி

இன்று என் உடல் முழுவதும்
மகரந்தத்தூள் படிந்து கிடக்கிறது

காமம் தோய்ந்த அவளது கண்கள்
எப்போதும் என்னை அருகில் வரச்சொல்லி
அழைப்பு விடுக்கிறது

அருகில் நானிருக்கும்போதோ பதற்றத்தைக் காட்டாமல்
இயல்பாயிருக்க முயற்சித்துப் பார்க்கிறாள்

பின்
தன்னை கொஞ்சம் முகர்ந்து திளைக்கும்படி
சமிக்ஞை காட்டி விலகிச் செல்கிறாள்

மேலும்
சில முத்தங்களுக்குப் பதிலாக
புத்தகங்களைப் பரிசளிக்கிறாள்

அப்போதெல்லாம் தொற்றிக் கொள்ளாத பதற்றம்
சந்தித்துவிட்டு திரும்புகையில் ஆட்டுவிக்கிறது

உறக்கமற்ற இந்த நண்பகலில்
அவளது பிஞ்சு விரல்களைச் சொடுக்கியபடி
கிடக்கிறேன் எனது அறையில்.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment