Sunday, September 8, 2019

மாவிபக விருதுகள் 2019


மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் விருதுகள் 2019
அன்பு எழுத்தாளர்களே…
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் சிறுகதை தொகுப்புகளில் மூன்றுக்கு தோழர் குபா நினைவு விருதும் கவிதைத் தொகுப்புகளில் மூன்றுக்கு  தோழர் சுப்புராயுலு நினைவு விருதும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
மூன்று விருதுகள்
ரூபாய் 5,000 - ரூபாய் 3,000 - ரூபாய் 2,000
விதி முறைகள்
  • விருதுத் தேர்விற்காக அனுப்பப்படும் நூல்கள் 2018 ஜனவரியிலிருந்து 2019 டிசம்பருக்குள் வெளியானதாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நூலிலும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்.
  • ஒரே எழுத்தாளரின் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் அனுமதிக்கப்படும்.
  • ஒரே எழுத்தாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட மாட்டாது.
  • நூல்கள் 31-12-2019க்குள் கீழ்கண்ட முகவரியை வந்தடைய வேண்டும்.
  • முடிவுகள் பிப்ரவரியில் அறிவிக்கப்படும்.
  • விருதுகள் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச்சின் தொடக்கத்தில் நடத்தப்படும் நிகழ்வில் வழங்கப்படும்.
  • மாவிபக’வின் அமைப்புக் குழுவில் உள்ளவர்கள் தேர்வுக்காக நூல்கள் அனுப்ப அனுமதி இல்லை.
  • நூலாசிரியர் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, நூலாசிரியர் பற்றிய குறிப்புகள் அனுப்ப வேண்டும்.
  • இது தொடர்பாக கடிதம் எழுதுவதற்கோ மின்னஞ்சல் அனுப்புவதற்கோ தொலைபேசி வழியாக தொடர்பு கொள்வதற்கோ எவ்விதத் தொடர்புகளுக்கும் எவ்விதத் தடையும் இல்லை.
  • தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
           தோழர் மதிகண்ணன், மாவிபக
           1888, பொதிகை வீதி, நாராயணபுரம்
           ஆத்திபட்டி அஞ்சல் – 626 161
           அருப்புக்கோட்டை
           மின்னஞ்சல் maveepaka@gmail.com
செல்லிடப்பேசிகள்
           மதிகண்ணன் - 94431 84050
           விஜயகுமார் - 94884 86436
           கேகே - 94421 84060
           சத்யா - 98659 55006
வாழ்த்துகளுடன் மாவிபக

No comments:

Post a Comment