Monday, March 20, 2017

அழகியலின் பண்ட மதிப்பு - மதிகண்ணன்


தற்கொலையா? கொலையா?
மாணவனின் மரணத்தைப்
பேசித்திரிந்த
அனைத்து ஆவிகளும்
அதை அப்படியே எறிந்துவிட்டு
காப்பு
பொறுப்பு
படைப்பு
லயிப்பு
சுரப்பு
பரப்பு
சிறப்பு
என
படைப்பைச் சரக்காக்கி
அழகியலின்
பண்ட மதிப்பைப் பிளந்து கொண்டிருக்கின்றன.

சூழலின்
எதைப்பற்றியும் கவலையற்று
கோடை மழையில்
நனைந்தபடி கண்கள் செருக
அசைபோட்டு நகர்கின்றன
செயற்கைச் சினையூட்டலில் பிறந்த
நாட்டு எருமைகளின் ஆன்மாக்கள்.

No comments:

Post a Comment