Monday, November 23, 2015

(தேடாமல் கிடைத்த) கவிதை - ரமேஷ்

ஆழ்ந்து நோக்குகையில்
சுழிவுகள் புலப்படும்
சிலபோது…

நகரும் குழிகள்
பயமுறுத்தும்
உற்று நோக்கலுக்குப்பின்
வாய்கள்
தரையாய் தோன்றும்

உதிர்ந்த இழைகள்
காட்சிப்பிழை

சுழியிலிருந்து தொடரும்
பெரும் வட்டங்கள்
காணாமல் போனது அனைத்தும்

வலிந்து திரும்புகையில்
காலில் அகப்பட்டது
சுழி.

-    (என்றோ எழுதியது)

No comments:

Post a Comment