Wednesday, January 3, 2018

பண்பாட்டுப் பயணப் பகிர்வுகள்

            2017 டிசம்பர் 31ம் நாள் இரவு 10 மணிக்குத் தொடங்கி 2018 ஜனவரி முதல்நாள் காலை 2 மணி வரை (4 மணிநேரம்) அருப்புக்கோட்டை மதுரைச்சாலை பெரியார் படிப்பகத்தில் மாவிபகவும் தமுஎகசவும் இணைந்து நடத்திய  ‘பண்பாட்டுப் பயணப் பகிர்வுகள்’ அரங்கில், கலை இலக்கியத் தளத்தில் செயல்படக்கூடிய 14 பேர் கலந்து கொண்டனர்.


            2017 வரையிலான தங்களின் கலை இலக்கியச் செயல்பாடுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் 2018ல் கலை இலக்கியத் தளத்தில் தங்களின் செயல்பாடுகளைத் திட்டமிட்டு தங்களுக்கான பயணத்திட்டத்தை அறிவித்தனர்.


            அரங்கினை மாவிபகவின் தோழர் மதிகண்ணன் ஒருங்கிணைத்தார்.


            அரங்கில் தோழர்கள் அஷ்ரஃப்தீன், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, கோவேந்தன், மாணிக்கவாசகம், பெ.ஆறுமுகப்பெருமாள், ஆர். வேல்ராஜன், பா.ராஜேந்திரன், அருப்புக்கோட்டை செல்வம், அ.இரா.சங்கரன், கா.சி.தமிழ்க்குமரன், மு.பழனிக்குமார், விடுதலை தி. ஆதவன், சத்யகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டின் மனநிறைவான தொடக்கமாக அரங்கில் கலந்து கொண்ட அனைவரும் உணர்ந்தனர்.












No comments:

Post a Comment